மொழி எனது எதிரி
லீனா மணிகேலை, கவிஞராகவும் திரைப்பட இயக்குநராகவும் மற்றும் சமூக செயல்பாட்டாளரகவும் ஒருசேர அறியப்பட்டவர். தனது எழுத்துப் பரப்பில் பன்முக படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர். இவரது பிரதிகளான கவிதைகள் /ஆவணப்படங்கள் / பெண்ணிய சொல்லாடல்களை உள்ளடக்கி இருப்பவை. இவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாக இவரிடம் இயங்குகிறதா? அல்லது இவைகளுக்கிடையில் இடைவெளிகள் நிலவுகின்றனவா? குறிப்பாக கவிதைகளின் எழுத்துத் தொழில்நுட்பமும் மற்றும் கவித்துவக் கருதோள்களும் யாவை என்ற வினாக்களை முன்வைத்து நிகழத்தப்பட்ட நீண்ட உரையாடலின் பிரதி வடிவமே ”மொழி எனது எதிரி ” என்ற நேர்காணல் புத்தகம். புனைகதையாசிரியர் பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் அவர்களும் நானும் இணைந்து; லீனா மணிமேகலையின் நெடிய உரையாடலை பதிவு செய்தோம்.
இந்நூல் லீனா அவர்களின் பிரக்ஞைப் பூர்வமான கவிதைகளில் பொதிந்திருக்கும் அழகியல் பின்னணி முழுத் தெளிவுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக செயல்பாட்டாளாராக இவர் இயம்பிய கருத்தாக்களை இவரே இன்று மீளாய்வு செய்யும் இடங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மனித மையத்தை வலியுறுத்தும் சமூகக் கருத்தாக்கங்களில் உறுதிப்பாடு உடையவராக இருந்தபோதிலும்; லீனாமணிமேகலை அவர்கள், கவிதைப் பிரதிகளின் கட்டமைபைப் பற்றி எழுப்பட்ட வினாக்களுக்கு அமனித மைய பார்வையிலிருந்து அளித்துள்ள விளக்கங்கள் சுவராசியமானவை.. இவர்து படைப்பாக்கங்கள் கோரும் மாற்று- வாசிப்பை எந்த புள்ளியிலிருந்து துவங்கலாம் என்பதற்கான திறவுகோல்கள் நேர்காணலில் காணக் கிடைக்கிறது எத்தகைய கடுமையான வினாக்களுக்கும் ஆற்றொழுக்காக ஒளிவு மறைவின்றி பதிலளித்த விதத்தை இங்கு குறிப்பிட வேண்டும். இந்நேர்காணல் லீனா மணிமேகலை அவர்களின் படைப்புகளின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்துக் கூடியதாக அமைந்திருக்கிறது.
எஸ். சண்முகம்
மார்ச் 2018
மொழி எனது எதிரி பதிப்பகம் கலைஞன் பதிப்பகம்
விலை 110
சிச்சிலி
18/062016
கால உறைவிலிருந்து எழுந்து முன்னே வந்ததுபோல நவீன கவிதையின் பாவனைகளையும் முற்றாக உதறி நம் காலத்தின் காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார் லீனா மணிமேகலை.காதல் உள்ளிட்ட சமகால மனித உறவு நிலைகள் இதுவரையான கவிதையின் சட்டகங்களுக்குள் பொருந்தவியலா அளவுக்குச் சிக்கலை அடைந்துவிட்டனவோ என்ற ஐயம் உண்டு. அந்த வகையில் லீனாவின் இந்த நூறு கவிதைகள் ஒரு தாவலை நிகழ்த்தியிருக்கின்றன. இக்கவிதைகளில் காதல் தன் ஆதிக் குணம் மாறாத பெரு வேட்கையாகவே நிகழ்கிறது. ஆனால் பிரமாணிக்கமாயிருப்பது இங்கு ஒரு பொருட்டல்ல,வலிகளும் துரோகங்களும் பிரிவுகளும் கூடத்தான்.யதார்த்த உலகின் தீவிரமான துயர்களுக்கு மெய்நிகர் உலகின் இளைப்பாறலை,ஆற்றுப்படுத்தலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கப் பத்தாண்டுகளின் மனிதனது உறவு நிலைகள், குறிப்பாக ஆண்-பெண் உறவு, கடும் சிக்கலான வடிவங்களை அடைந்திருக்கையில், அவற்றை நோக்கிய புரிதலை முன்வைத்த கவிதைகளாகவும் லீனாவின் இந்தக் கவிதைகளைப் பார்க்கலாம். டி. எஸ். எலியட்டின் வரியொன்றில் வருவதைப் போல நினைவும் இச்சையும் தீவிரமாகக் கலந்து நிற்கும் வெளியாக இக்கவிதைகள் இருக்கின்றன. மொழியும் வெளிப்பாட்டின் தீர்க்கமும் பாடுபொருட்களும் இக்கவிதைகளை நம் காலத்துக் காதலின் உன்னத சங்கீதங்களாக (Psalms) எண்ண வைக்கின்றன.
– கவிஞர் அசதா
(ஜூலை 2016)
நற்றிணை பதிப்பகம்
விலை 100
കൂത്തച്ചികളുടെ റാണി
A collection of fifty poems of Leena Manimekalai, in Malayalam translation, was brought out by the foremost publisher in Kerala, DC Books, in September, 2014, titled Koothachikalude Rani ( കൂത്തച്ചികളുടെ റാണി). Bhaskaran Bara, well known illustrator/painter in Kerala did the cover for Koothachikalude Rani. N. Ravi Shanker did the translations for കൂത്തച്ചികളുടെ റാണി. He is a poet in his own right in English having brought out a collection ‘Architecture of Flesh’ in 2015. He is also known for his translation of the Tamil dalit writer Bama’s short stories in English, published as ‘Harum ScarumSaar and Other Stories’ by Women Unlimited, New Delhi. His translations from Tamil also appear in Oxford University Press’s Anthology of Tamil Dalit literature and Penguin’s Anthology of South Indian Dalit literature.
தேவதைகள்
சிறந்த சர்வதேச ஆவணப்படத்திற்கான தங்கச்சங்கு விருது, சிறந்த எதிர் சினிமாவிற்கான ஜான் ஆபிரஹாம் விருது, கென்யாவின் “Women Building Peace” ஜூரி விருது, ஜெர்மனியின் மூனிக் சர்வதேச விழாவில் Horizon விருதுக்கான பரிந்துரை, ஆஸ்திரேலியாவின் ஆசிய பசிபிக் ஸ்கிரீன் விருதுக்கான முன்தேர்வு, சென்னை தேசிய ஆவணப்பட விழாவில் One Billion Eyes விருது, ஆகிய சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற ஆவணப்படத்தின் திரைக்கதை வடிவம் இந்தப் புத்தகம்.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச்சங்கு விருதின் பாராட்டு பத்திரத்திலிருந்து சில வரிகள்…”தமிழ்க் கலாசாரத்தின் கட்டுகளிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொண்ட மூன்று அசாதாரணப் பெண்களை தேவதைகளாக வரிக்கிறார் இளம் படைப்பாளி லீனா மணிமேகலை. இந்த மூன்று பெண்களும் முன்மாதிரிகளிலிருந்து விலகி தங்களின் முழு சக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும்படி அவர்களுடையதேயான செயற்கைத்தன்மையற்ற நம்பகத்தன்மைமிக்க படைப்புத்தளத்தை உருவாக்கி காட்டியுள்ளார் இயக்குனர்”
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)
பெண்ணாடி
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில் பெண்மொழியின் ரேகைகளைக் கேமிரா லென்ஸ் கொண்டு தடம் பிடிக்கும் முயற்சி பின்னாடி என்ற இந்த 52 நிமிட சலனப்படம். Public Sector Broadcasting Trust(PSBT) திரைப்பட உதவித் தொகை பெற்று உருவாக்கப்படட பெண்ணாடி, லீனா மணிமேகலை என்ற தற்காலக் கவிஞர் தன அகவழிப் பயணத்தினூடே சங்கத் திணைவகைகள் நிலப்பாகுபாடு, அதற்குரிய பருவங்கள், பறவைகள், விலங்குகள், பூக்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சாமிகள், காதல் ஒழுக்கங்கள், என்ற ஒரு வசீகரமான வெளிக்கு பார்வையாளரின் கைப்பிடித்து அழைத்து செல்லும் காட்சிப் பிரதியான பெண்ணாடியின் திரைக்கதை.
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)