சைபர் க்ரைமை கண்டிக்கிறேன்; ஜோதிமணிக்கு ஆதரவு #ISupportJothimani
31/12/2016
லீனா மணிமேகலை, எழுத்தாளர்:
ஜோதிமணியின் மீது நடந்திருக்கும் சைபர் பாலியல் தாக்குதலை கண்டிக்கிறேன். ஆனால் இது முதல் தடவையல்ல. சமூக அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவிடும் பெண்களை பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யும் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இடது, வலது, தேசியவாதிகள் என அனைத்து சித்தாந்த ரவுடிகள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கவிஞர்கள், செயல்பாட்டாளர்கள், கார்டுனிஸ்டுகள், என அறியப்பட்டவர்களின் “ஆண்மை” ஒன்றுசேரும் புள்ளி பாலியல் வசவு.
தேர்ந்தெடுத்தவர்களுக்கு மட்டும் கூக்குரல் போடாமல், தங்களுக்கு உவப்பில்லாத அரசியல் கருத்துள்ள பெண்கள் தாக்கப்படும்போதும் எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தாலன்றி, இந்த வன்முறை நிற்காது. மொட்டை சுவரில் அமர்ந்து விசில் அடிப்பவர்கள், நோ சொல்லும் பெண் மீது ஆசிட் அடிப்பவர்கள், கத்தியால் குத்துபவர்கள் தான் முகநூல் டிவிட்டர் சுவர்களிலும் பொறுக்கி கொண்டிருக்கிறார்கள். இதில் இன்டலக்சுவல் ஆண்களும் விதிவிலக்கல்ல. ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் சைபர் செல்களும் சைபர் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டால் ஒருவேளை இந்த வக்கிரத்தை ஒடுக்கலாம். வன்முறையாளர்கள் தொடர்ந்து தில்லாக இயங்குவதற்கு காரணம் நமது கலாசாரத்திலேயே ஊறியிருக்கும் வன்முறை தான். “அடக்கி வாசிக்கலாம்ல!!” “நாய்ங்க குலைச்சிட்டு தான் இருக்கும் அதுக்கெல்லாம் பயப்படலாமா?!” என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச அட்வைஸ் மட்டும் எப்போதும் கிடைக்கும். ஆனால் வன்முறையாளர்களை நோக்கி எல்லா சுட்டு விரல்களும் அறிவுரைகளும் பாரபட்சமில்லாமல் நீளுமா என்றால் கேள்விக்குறி தான். மேற்கில் இருப்பது போல் இங்கே கிடுக்கிப்பிடி பிடித்தால் நம்மூரில் கூடுதல் சிறைகள் தான் கட்ட வேண்டி வரும்.
I want to watch my film in a local theatre
DECEMBER 20, 2016 16:26 IST
UPDATED: DECEMBER 20, 2016 20:08 IST
Leena Manimekalai’s new project, The Sunshine, traces the journey of a displaced young refugee separated from his childhood sweetheart. PARSHATHY J. NATH has the details
“I was this mad indie filmmaker, who was desperate to make a film, be it by begging or stealing,” says Leena Manimekalai. It takes just a good cup of coffee and a soothing breeze to make the filmmaker pour her heart out on her favourite subject, cinema, and the struggle to make people watch her work, which deals with strong political issues.
Leena is hopeful and excited about her new project The Sunshine that has also been selected to be pitched for the co-production market at the NFDC Film Bazaar, Goa. It was the only Tamil project out of the 19 films selected from Asia. She says it is more of a human document than just a feature film.
S.R. Prabhu of Dream Warriors Pictures, who produced films such as Aruvi, Kaashmora and Joker, is partly backing the two-million-dollar-film. He will distribute it across the country.
“No mainstream producer would be interested to invest in a space like this. Prabhu is keen on creating good content. We have to appreciate that, because support from a mainstream producer keeps you in good stead, especially when you are pitching it in front of an international production house.
We have also found co-producers in France and Canada, and are in talks with a few in Thailand and Sri Lanka. The paperwork is still in progress. It is going on floors as an Indo-French-Canadian project.”
The film is co-written by Sri Lankan author Shobasakthi, who acted in Palme d’Or winning Dheepan, and Leena.
It is about a young refugee who flees from war-torn North Sri Lanka and journeys through India, Nepal and Thailand to an uncertain destination. He is separated from his childhood sweetheart.
“Refugee is a term coined by humans. Have you heard of an insect or a bird refugee? Why don’t we see them as humans too? It is high time we question this word and try looking at them as you and me,” says Leena.
“The Sunshine is also inspired by Shobasakthi’s personal journey, his lust for life. It is about a very ordinary man running around the world, over the counties, lands and seas to live one more day of his life.”
Leena in the sets of Sengadal
Leena has always dealt with the scars inflicted by war on people. “So many people have been displaced by the Sri Lankan civil war. Each story is unique. I know friends who have crossed 16 countries to reach a safe destination. It is an intense journey that should be documented.”
Her previous work The Dead Sea (Sengadal) tracked the story of Dhanushkodi, of Tamil fishermen and Sri Lankan refugees, victims traumatised by war and politics. “Neither the Indian nor the Sri Lankan governments favour them. Their lives are marred by conflicts. Politicians use them as vote banks. Every tree had a story to tell there.”
She had to battle with resistance from the Central Board of Film Certification, commercial film circles and the fringe groups. Not one to give in easily, Leena distributed the film worldwide through crowd-funding, sent it for revision, appealed to the tribunal and finally got it cleared. But, fighting crowd censorship is the worst, says Leena. “Any filmmaker who has touched the Sri Lankan issue has faced this resistance.”
We should take a lesson from the way people outside India treat their history, feels Leena, who has travelled all across the globe with her film.
While the international audience has recognised her work, people back home still cannot come to terms with her bold political engagement. “We have to learn how to work with our memories from the Germans. So many films are being made on the Auschwitz concentration camp.
They have put their history out in the open. And, they admit they have made a mistake. Here, we want to bury the truth and live in the glory of our past.”
Leena’s docu-feature White Van Stories revealed how families were picked up by snatch squads in white vans during the conflict period in Sri Lanka.
Leena has always been a fierce writer with an independent expression on gender and sexuality. Though she does not have formal training in filmmaking, she sees herself as a storyteller and a documentary junkie. For a 20-year-old engineering graduate, who came from a “conventional Left” background, the world of literature, cinema and art was a new experience, she recalls. Till then, she saw the world through the lens of ideology. “You are told something else and are living some other life. Once I threw myself out into the streets, I sensed freedom.”
Now, she says, she is in a post-ideology space that allows her to see life in its own shades. “It took me some time to free myself from ideological hang-ups. Initially, I was on a mission to change the world. Films helped me see life as it is. Post ideology is a nice space to be in. If you are not born into a family believing in a certain ideology, you tend to be more liberated.”
Cinema gave her an agency to enter spaces that she was otherwise barred from. “I had a camera in hand the first time I entered a crematorium, while shooting my film Goddesses. It featured a funeral singer, a graveyard worker and a fisherwoman. They are the real feminists.”
Leena says she feels constantly judged in academic, journalistic or artistic circles. It is only when she is working with indigenous communities that she feels accepted. “They are non-judgemental and inclusive by nature, particularly those who live in the margins. Some families in Northern Sri Lanka do not have a roof. Yet, they were sharing their food with me.”
In The Sunshine, Leena wants to tell the story of human struggle and not just merely make a political statement. And, however much her previous works have helped her earn a name in international film circles, there is nothing more satisfying for a filmmaker than the masses watching her work, says Leena. “I have screened my documentaries in almost 300 villages, projected on white dhotis and on the walls of schools and colleges. Still, I could reach out to only one to two per cent. I want The Sunshine to run in Sathyam. My dream is to buy tickets for my film and watch it in a local theatre.”
ஆண்பால் பெண்பால்
நன்றி – ஆனந்த விகடன் 20/12/2016
வயது 36, சிங்கிள். திரைப்படத்துறையில இயக்குநரா இருக்கேன். கவிதைகள் எழுதுவேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கினால், குலுக்கலில் நெளியும் கைகளில் ஆயிரம் கேள்விகள். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கைகுலுக்க கூட ஆளில்லாத போது, வாடகைக்கு வீடு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பகல் கனவு.பிராமின்ஸ் ஒன்லி, ஃபேமிலி ஒன்லி, ஐடி ப்ரொபெஷனல்ஸ் ஒன்லியைத் தாண்டி நாளிதழ் களில் வெளியாகும் வாடகை வீட்டுக்கான விளம்பரங்கள் ஒன்றிரண்டை குறித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர்களிடம் பேசிப் பார்த்தால் புரிந்து விடும். தமிழில் “வீடு” என்றால் “ஆண்பால்” என்று. ஹை ஸ்கூல் படிக்கும்போது ஹிந்தியை தனியாக படித்து பிராத்மிக், ராஷ்ட்ரபாஷா, பிரவீன் வரை பரீட்சை எழுதியிருக்கிறேன். ஆனாலும் அந்த மொழியில் மேசை – நாற்காலி – கட்டில் – கத்தி என்று சடப் பொருட்களுக்கும் பால்விகுதி வருவது கடைசி வரை குழப்பமாயிருக்கும். தமிழ் மொழியில் அந்த சிக்கல் இல்லையென்றாலும் தமிழ் சமூகத்திற்கு “பால்” பெரும் சிக்கல் தான். “கல்யாணம் ஆகலையா? ஏன்? ஓ விவாகரத்தா? எதனால விவாகரத்து ஆச்சு? வேற கல்யாணம் ஏதும் பண்ணலையா? அப்பா என்ன செய்றாரு? என்ன இறந்துட்டாரா? ஆச்சச்சோ பாவம். எங்க வேலை செய்றீங்க? படம் எடுக்கிறீங்களா? என்ன படம்?” எனத் துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கும் வாடகை வீட்டிற்கும் இடையே பல மைல்கள் கடக்க வேண்டியிருக்கும். கடந்த ஐந்து வருடத்தில், ஆறு வாடகை வீடுகள் மாறிய என் அனுபவங்களை ஒரு நீண்ட நாவலே எழுதலாம். தனித்து வாழும் பெண் தமிழ் சமூகத்தில் இன்னும் தீண்டப்படாத ஜந்து தான். ஓராயிரம் சுட்டுவிரல்கள் அவளிருக்கும் திசை நோக்கி நீண்டுக் கொண்டே இருக்கும். தந்தை, சகோதரன், கணவன் என குடும்ப ஆண்களின் துணையில்லாது, தன் சொந்த சம்பாத்தியத்தில் தனியே ஒரு பெண் நேர்மையாக வாழ முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் இந்த சமூகத்திற்கு வாய்க்கவில்லை.
சுயதேர்வுடன், அமைப்புகளுக்கு வெளியே வாழும் பெண்களை சதா சந்தேகத்துடனும் கண்காணிப்புடனும் தான் பொதுச் சமூகம் அணுகுகிறது. தனித்த பெண் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு ஒழுங்குப் போலீஸ்தான். உடுக்கும் உடை, பேசும் மொழி, செய்யும் வேலை, மேற்கொள்ளும் பயணங்கள், கூட இருக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாவற்றையும் எடைபோட்டுக் கொண்டே இருக்கும் கூட்டம், ஒரு சின்ன சரிவு ஏற்பட்டாலும் “அவளுக்கு இது தேவை தான்” என்று பழிக்க தயாராக இருக்கும். போறவன், வர்றவன், பெயர் தெரிஞ்சவன், தெரியாதவன்,ஆம்பள, பொம்பள, கம்பியூனிஸ்ட், பெரியாரிஸ்ட், பெமினிஸ்ட் என வகை தொகை தாண்டி எல்லோரிடமும், “ஆண் துணை இல்லாத பெண்ணைக்” குறித்த ஒரு மரியாதைக் குறைவு இருப்பது தான் கசப்பான உண்மை. கற்கள் எறிவதற்குரிய எளிய திசையாக தனித்து வாழும் பெண் எப்போதும் இருக்கிறாள்.
“Personal is Political” என்றொரு வாசகம் உண்டு. சரி என்று நான் நம்பும் விஷயத்திற்கும் வாழ்வுக்கும் நடுவே பெரிய இடைவெளியில்லாமல் வாழ தலைப்படுவதுண்டு. என் குடும்பக்கண்ணியில் இருந்து விலகி முதன்முதலாக சாதி மீறி, மதம் மீறி, தாலி போன்ற சடங்குகள் மறுத்து திருமணம் செய்தேன். பின் கணவனிடமிருந்தும் மணவிலக்கு வாங்கினேன். குடும்பம், திருமணம், சாதி, மதம், சட்டம் என்று நடப்பில் இருக்கும் எந்த அமைப்பும் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்ணுக்கானதல்ல என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்ததால் இவை எல்லாவற்றுக்கும் வெளியில் ஒரு வாழ்க்கையை சாத்தியமாக்க முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறேன். நீயென்ன “அனார்கிஸ்டா”(Anarchist) என்று பலர் கேட்பதுண்டு. இல்லை, ஒரு பறவை போல, புழு பூச்சி போல, காட்டுச்செடி போல, ஆட்டுக்குட்டி போல தன்னியல்பாக வாழ நினைக்கும் உயிரி என்று நான் பதில் சொல்வதுமுண்டு.
பொம்பள புள்ளயா தலையப் பின்னாம விரிச்சு போட்டு அலையறா, பொம்பளப்புள்ளயா கால்கள சேர்த்து உக்காராம பப்பரப்பான்னு விரிக்கிறா, பொம்பளப்புள்ளயா அடக்கமா இருக்காம இடி இடின்னு சிரிக்கறா, பொம்பளப் புள்ளயா பொழுது சாயறதுக்குள்ள வீடு சேராம ஊர் மேயறா, பொம்பள புள்ளயா சட்டி பான தேய்க்காம ஓயாம விளையாட்டு புத்தி, பொம்பள புள்ளயா ஒரு இடத்தில குந்தாம கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு திரியறா, பொம்பளப்புள்ளயா வாயடக்கம் இல்லாம எதுத்து எதுத்துப் பேசறா என்று வளரும் பருவத்தில் என் தன்னியல்பான நடத்தைகள் எல்லாம் குற்றமாக்கப்பட்டன. இவ ஆம்பள மாதிரி கேள்வி கேக்கறா, இவ ஆம்பள மாதிரி அக்கரைக்கு இக்கரை நீச்சல் அடிக்கிறா, இவ ஆம்பள மாதிரி சுவரேறி குதிக்கிறா, இவ ஆம்பள மாதிரி மரத்துக்கு மரம் தாவறா, இவ ஆம்பள மாதிரி பைக் ஓட்றா, இவ ஆம்பள மாதிரி தெருவில சண்டைக்கு இழுக்கிறா என்று என் மேல் தரப்பட்ட பிராதுகள் ஒவ்வொன்றும் நான் விரும்பி செய்தவை எல்லாம் “பால்” மீறிய செயல்களாய் கருதப்பட்டதின் அடிப்படையிலானவை.
பால் அடையாளம் பெரும் லஜ்ஜையாக, முட்டுக்கட்டையாக, கைவிலங்காக பதின்பருவத்திலேயே எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்ட தால், “பெண்ணாகப் பிறந்து விட்டதால் நீ இதை செய்ய முடியாது” என்று சொன்னதையெல்லாம் செய்துப் பார்ப்பது எனக்கு பிடித்த விளையாட்டானது.செய் என்று சொன்னால் செய்யாமல் ஏய்ப்பதும், செய்யாதே என்று சொன்னால் செய்துப் பார்த்துவிடும் பிடிவாதமும், தேவையில்லாத கட்டுப்பாடுகள் வளர்த்துவிடும் குணங்கள் தானே.
பதினெட்டு வயதில் திருமணம் செய்துக்கொண்டுப் பின் எதுவானாலும் படி என்று கட்டாயப்படுத்திய பெற்றோரை மீறி படித்தேன். பொறியியல் படிப்பில் பெண்கள் தேர்வு செய்ய தயங்கும் இன்ஸ்ட்ருமென் டேஷன் அண்ட் கண்ட்ரோல் துறையை தேர்ந்தெடுத்துப் படித்து டிஷ்டிங்கஷனில் பட்டம் வாங்கினேன். கல்லூரி இறுதியாண்டில், மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாம் என்று பரீட்சைகளை எழுதி தள்ளிக்கொண்டிருந்த காலத்தில், தற்செயலாய் கிடைத்த சினிமா அனுபவம் எனக்குள் இருக்கும் கலைஞியை கண்டெடுக்க உதவியது . அப்பா தமிழாசிரியர் ரகுபதி கற்றுக்கொடுத்திருந்த தமிழ் என்னுள் ஊறி தினெவெடுத்திருந்தது. அம்மா ரமாவின் கம்யூனிஸ்ட் குடும்ப பின்புலம் தந்திருந்த துணிச்சல் கை கொடுத்தது. என் கல்லூரித் தோழர்கள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆனபோது, நான் எழுத்தும் சினிமாவும் தான் வாழ்க்கை என முடிவெடுத்தேன். ஒழுக்கம் கெட்ட பெண்கள் தான் கலைத்துறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று வீடும் சுற்றமும் கடுமையாக எதிர்த்தது. பிரம்மாண்டமான ஆண்குறியாக இறுகி தடித்திருந்த சினிமா – கலை – இலக்கிய – அரசியல் துறைகள் தந்த சவால்கள் எனக்குரிய பரந்த ஆடுகளத்தை தந்தன. தெருவில் என்னையே தூக்கி எறிந்துக் கொண்டேன். உண்மையான கற்றல் அந்தப் புள்ளியில் தான் தொடங்கியது. கற்றல் என்பது ஏற்கனவே தவறாக கற்றுக்கொடுக்கப்பட்டதைக் கைவிடுதலும் தானே!
தமிழ் சினிமா ஆணின் உலகம். பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்குவதை தவிர பெண்ணுக்கு வேறெதையும் செய்துவிடும் பிரயத்தனமும் அதற்கில்லை. பழைய பண்ணையார் மனப்பான்மையோடும் வீங்கிய ஆண் ஈகோ வோடும் வலம் வரும் இயக்குனர்கள், சரிசமமாக அவர்கள் முன் அமர்ந்து விவாதம் செய்யும் பெண்ணை, அவளின் அறிவை வெறும் திமிராக மட்டுமே பார்க்கும் இயலாமை நிறைந்தவர்கள்.மிகக் குறைந்த காலமே உதவி இயக்குனராக வேலை செய்தேன். டைரக்டர் சார் ஸ்பாட்ல நிற்கும் போது வேற யாரும் உட்காரக் கூடாது, பேசக்கூடாது போன்ற சர்வாதிகார சட்டங்களுக்கும் கலைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்விகள் ஒவ்வொன்றாய் குடைய ஆரம்பித்தது. எடுக்கும் படம் நல்ல படமா என்பதை தாண்டி, கொஞ்சம் கூட ஜனநாயகம் இல்லாத வேலைச் சூழல் அலர்ஜியாய் இருந்தது.சுற்றிலும் போலி பம்மாத்துகள். நான் வேலை செய்த யூனிட்களில், டெக்னீஷியனாக ஒரே ஒரு பெண்ணாக நான் மட்டும் வேலை செய்தேன். லொகேஷனில் என்னை நடிகையா என்று தான் பார்ப்பவர்கள் கேட்பார்கள். இல்லை, நான் அசிஸ்டென்ட் டைரக்டர் என்றால் மேலும் கீழும் வினோதமாக பார்ப்பார்கள். தலையை இறுக்க கட்டி தொப்பி மாட்டி தொள தொள டிஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நின்றாலும் “நீ அழகா இருக்க” என்ற வாசகத்தின் குறுக்குவாசல் வழியாக நட்பு கோரும் மக்கு ஆண்களோடு ஒரு காவியமும் படைத்துவிட முடியாதென்பதால், சுயாதீன சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சரியோ தப்போ நாமே செய்துப் பார்த்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் சிறிய காமிராவோடும், காலரில் மாட்டிய மைக்ரோஃபோனோடும், தோள்பையில் தொங்கும் மேக்புக்கோடும், 2002-ம் ஆண்டு சினிமா எடுக்க கிளம்பினேன். இன்று வரை சிறிதும் பெரிதுமாக ஒரு டஜன் படங்கள், திரையிடல்கள், விவாதங்கள் என 300 கிராமங்கள், 30 நாடுகள், 3000 இரவுகள் என பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பெண்ணாய் பிறந்ததால், என் தந்தை மரணமடைந்தபோது அவரை வழியனுப்ப என்னை சுடுகாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், என் “தேவதைகள்” படத்திற்காக புதுவையில் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் கிருஷ்ண வேணியம்மாவை படம்பிடிக்க முதன்முதலில் கேமிராவோடு இடுகாட்டில் நுழைந்தேன். என் பாட்டி ராஜேஸ்வரிக்கு பதினோரு வயதிலும், என் அம்மா ரமாவுக்கு பதினைந்து வயதிலும் திருமணம் செய்து வைத்ததை கேள்வி கேட்க நான் பிறந்திருக்கவில்லை. ஆனால், என் “பலிபீடம்” படம் மூலமாக குழந்தை திருமணங்களை ஆவணப்படுத்தி விவாதங்களை எழுப்பினேன். பெண்கள் சாதியாகவும் பாலினமாகவும் இரண்டடுக்குகளில் ஒடுக்கப்படுவதை தட்டிக்கேட்க என் படங்களை பயன்படுத்தினேன். மீனவர்களை, ஆதிவாசிகளை, அகதிகளை, போர் தின்ற மனிதர்களை சந்தித்து, புரிந்துக்கொண்டு அரவணைக்கும் வாய்ப்பை எனக்கு கேமிரா தான் வழங்கியது. அந்தப்பயணங்களும், பயணங்களில் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும், மொழி, தேசம், நிறம் என்ற அடையாளங்களைக் கடந்த, குறிப்பாக பால் அடையாளத்தை கடந்த உயிரியாக என்னை மாற்றி விட்டன. எனக்கு நான் தேடிக் கொண்ட ஆசிரியர்கள் பயணங்களிலும் படப்பிடிப்புகளிலும் சந்தித்த மனிதர்கள் தாம் .
பால் கடந்த அன்பும் நட்பும் சாத்தியமா என்றால் சாத்தியம் என்று அடித்து சொல்வேன். பரஸ்பர மதிப்பும் மரியாதையும் அதை சாத்தியப்படுத்தும். சினிமா ஒரு கூட்டு முயற்சி. அதில் பால் சார்ந்த உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் இருந்தால் இணைந்து வேலை செய்து படைப்புகளை உருவாக்க முடியாது. என்னுடன் பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து பணியாற்றும் எடிட்டர் தங்கராஜ் என் ஆத்ம நண்பர். அவர் பயாலஜிகலாக ஆணுடலுடன் இருக்கிறார் என்பதும் நான் பயாலஜிகலாக பெண்ணுடலுடன் இருக்கிறேன் என்பதும் எங்கள் நட்புக்கோ வேலைகளுக்கோ ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. படைப்பாற்றல் வெளியில் பால் அடையாளங்கள் மறக்கடிக்கப்படுவதும், பால் பேதங்கள் அடித்துச் செல்லப்படுவதையும் நான் திரைப்பட உருவாக்கப் பணிகளில் அனுபவித்திருக்கிறேன். பல சமயங்களில் படப்பிடிப்புக் குழுவுடன் காடுகளிலும் மலைகளிலும் கடற்கரைகளிலும் ஒன்றாக தங்கி உறங்கி உடைமாற்றி வேலை செய்யும் சூழல் தான் இருக்கும். படைப்பு தான் நாங்கள் காணும் கூட்டுக் கனவு. பால் படிநிலைகள் அங்கு குறுக்கே வர அனுமதியே இல்லை. ஒளிப்பதிவாளர்கள் சன்னி ஜோசப், ரமணி, ரதீஷ் ரவீந்தரன், தனேஷ், அரவிந்த் என்று என் நண்பர்கள் பால் கடந்த ஆன்மாக்கள். எங்கள் உறவிலும் பரிவர்த்தனைகளிலும் அன்பிலும் பால் உறுத்தியதே இல்லை. இன்னும் சரியாக சொன்னால் என்னை பெண்பால் என நினைவுறுத்தும் யாரிடமும் என்னால் தொடர்ந்து நட்பு பாராட்டவோ, இணைந்து வேலை செய்யவோ முடிந்ததல்லை. வாழ்விலும் தாழ்விலும் அரவணைக்கும் என் சகோதரன் இளங்கோ, நிபந்தனையற்று நேசிக்கும் என் இணையும் சிற்பியுமான எஸ்வந், சித்தப்பா என்று நான் உரிமையுடன் அழைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா, ஓவியர் மணிவண்ணன், கவிஞர் சாகிப், வாசகராயிருந்து நண்பரான தீரா, என் மொழிபெயர்ப்பாளரும் உயிர் நண்பருமான பாலக்காடு ரவி, நிழற்படக்கலைஞர் விஜயசேகர் என்று என் எல்லா மேட்னெஸ்ஸையும் பொறுத்துக் கொள்ளும் ஆண்பால் வட்டம் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். என் காலஞ்சென்ற தந்தை ரகுபதி நேசித்ததைப் போல் யாரும் இன்னும் என்னை நேசிக்கவில்லை. “கண்ணம்மா, நீ என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழை மறக்க கூடாது. விடாது உழைக்கனும். உழைப்பு ஒன்று தான் நம் சொத்து. பெண்ணுக்கு முக்கியம் பொருளாதார தற்சார்பு. மற்றதெல்லாம் உன் தேர்வு தான்” என்று அவர் என் கைகளை அவர் கைகளில் பொதித்துக் கொண்டு சொன்ன ஈரம் இன்னும் காயவில்லை. அவர் என்னை திடீரென விட்டுச்சென்றதாலோ என்னவோ, நான் நேசிப்பவர்களும் என்னை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதட்டம் எப்போதும் என்னை வாட்டும். ஆணோ, பெண்ணோ, உறவுகளில், “என்றென்றும்” என்ற நிலைத்த உணர்வு சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.
மொழி எனது எதிரி என்று எழுதியிருப்பேன். பாலின ஏற்றத்தாழ்வுகளின் ஊற்று மொழி. சங்க காலத்தில் எழுதியதாக சொல்லப்படும் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற கவிஞர்கள் தவிர, ஆறாம் நூற்றாண்டின் காரைக்கால் அம்மையார், எட்டாம் நூற்றாண்டின் ஆண்டாள் தாண்டி தமிழில் பெண்கள் எழுதிய வரலாறு இல்லை. 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பெண்கள் எழுதுகிறார்கள். அல்லது, ஆண் மைய மொழியை அடித்து, நிமிர்த்தி, வளைத்து தமதாக்கி கொண்டிருக்கிறார்கள் என சொல்லலாம். மொழிக்குப் பாலினம் இல்லை. ஆனால் பெண்கள் இந்த இந்த சொற்களை பயன்படுத்துவது ஆபாசம். மொழிக்கு பாலினம் இல்லை. ஆனால் பெண்கள் அந்த அந்த விஷயங்களை வெளிப்படையாக எழுதுவது அசிங்கம். மொழிக்கு பாலினம் இல்லை. ஆனால் நமக்கென்று மரபு இருக்கு, அதை எப்படி பெண்கள் மீறலாம் . மொழிக்குப் பாலினம் இல்லை. ஆனால் பெண்களாக இருப்பதாலேயே கவனம் பெற்று விடுகிறார்கள் என்று பலவாறு காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய முதல் கவிதை தொகுப்பு “ஒற்றையில்லையென” புத்தக அட்டையில் ஒரு நிர்வாணப் பெண்ணின் ஓவியம் இருக்கும்.வந்தவாசியில் நடந்த முதல் விமர்சனக் கூட்டத்தில் விமர்சகர் அந்தப் புத்தகத்திற்கு பிரவுன் கவர் போட்டு எடுத்து வந்திருந்தார். அவர் நம்மூர் கோவில்களுக்கெல்லாம் கண்ணைக் கட்டிக்கொண்டு போவார் போலிருக்கிறது. அங்கு தொடங்கி இன்று வரை சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பெண்களின் “இருப்பை” சதா சர்ச்சைக்குள்ளாக்குவதால் அவர்களின் வீர்யமான படைப்புகள் சரியான வாசக கவனமோ, விமர்சனமோ பெற முடிவதில்லை என்பது தான் துயரம். தமிழ் இலக்கிய உலகம் விசித்திரமானது. தங்கள் கருத்தியல்களை வாசலில் செருப்பைக் கழற்றி வைப்பது போல வைத்துவிட்டு, “ஏய் என்னடி சமையல்” என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழையும் ஆண்கள் தான் அதன் நாயகர்கள். தெருவில் சீட்டியடிக்கிறவனிடம் கூட ஒரு நேர்மையிருக்கும்.ஆனால் புரட்சி பேசுபவர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதும் பெண்ணை, வாசகிகளை வெறும் செக்ஸுவல் ஆப்ஜெக்ட்டாக பார்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. என்னோடு பயணம் வருவாயா? சரிக்கு சரி சிகரெட் சரக்கு அடிப்பாயா? இரவிரவாக விவாதம் புரிவாயா? என்று கட்டபொம்மன் மாதிரி நம்ம இலக்கியவாதிகள் சவால் விடுவதோடு சரி. ஒரு “No” சொல்லும் பெண்ணை எதிர்கொள்ளும் மன உயரம் கூட இல்லாமல் தான் இருக்கிறார்கள். இவர்களின் மன விகாரங்களுக்கு இப்போது ஃபேஸ்புக் வேறு புதிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பெண்ணின் படைப்புகளை விட பெண்ணைகுறித்த பேச்சுக்கு அடிமையான இலக்கிய உலகத்தில் தான் நானும் இயங்கி கொண்டிருக்கிறேன் என்பது சமயங்களில் ஆயாசமாக இருக்கும். இலக்கியக் கூட்டத்திற்குப் போய், பலநாள் இரவு பகலாக முழித்திருந்து எழுதிய கட்டுரையை வாசித்திருப்பேன். ஆனால் அடுத்த நாள் நான் அணிந்திருந்த ப்ளவுஸ் குறித்த சலசலப்பு தான் ஓடிக்கொண்டிருக்கும். நான்பியூட்டி பார்லருக்குப் போறேன், வெள்ளைக் கார்ல வரேன், ஜீன்ஸ் போடறேன் என்பதெல்லாம் கூட விமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியதும் கூட ஒரு பெண் தான் என்பது நகைமுரண். பெண் பொருளாதார தற்சார்போடு தொடர்ந்து இயங்குவதையும், ரசனையாக வாழ்வதையும் , தன்னை அழகாக வைத்துக்கொளவதையும் கூட ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்து பெண்கள் தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆதிக்க சமூகம் பெண்களுக்கு ஏற்படுத்தும் கடும் உளவியல் சிக்கலிது. பெண்ணிய சிந்தனைகளுக்கும் ஆணின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் இந்த சிக்கலில் சக பெண் எதிரியாகிறாள். தந்தைவழி சமூகம் பெண்ணையும் பெண்ணையும் பிரித்து வைத்து தானே இத்தனை மாமாங்கமாய் கோலோச்சுகிறது.இந்த சூழலில் ஏன் தொடர்ந்து எழுத வேண்டும் என்று இதை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுதிக் கடக்கும் போது என்னை நானே சோர்விலிருந்தும் அவநம்பிக்கைகளிலுமிருந்தும் விடுவித்துக்கொள்ளவும் முடிகிறது. மனதில் வெறுப்பை மண்ட விடாமல், முரண்களைத் தாண்டி, காயங்களை மறந்து ஒரு முத்தத்தால் சட்டென எல்லோரையும் அரவணைத்துக் கொள்ள முடிகிற பித்து நிலையை வரம் வேண்டி தொடர்ந்து எழுதுகிறேன், இயங்குகிறேன்.
தரப்பட்ட மத அடையாளத்திலிருந்து விடுவித்துக் கொள்வது போல, சாதி அடையாளத்தை நிராகரிப்பதைப்போல, பால் அடையாளத்தையும் கட்டுடைக்கும் தேவை இருக்கிறது. ஆண் பெண் என்ற இருமை எதிர்வுகளுக்கு வெளியே பாலினத்தை ஒரு நிறப்பிரிகையாக, திரவமாக புரிந்துக்கொள்ளும் புள்ளிக்கு நகர்ந்து வந்திருக்கிறேன். திருநங்கை, திருநம்பி, இடையிலிங்கர், நடுநர், இருநர், முழுநர் என்று ஆண் – பெண் பைனரிக்கு(binary) வெளியே விளிம்பில் நிற்கும் பால் புதுமையரின்( gender queer) பக்கம் நின்று வரலாற்றை கலை – இலக்கியம் வழி திருப்பி எழுத விரும்புகிறேன். யாரும் யாருக்கும் மேலானவர்களும் இல்லை, கீழானவர்களும் இல்லை. வேறானவர்கள் என்பதை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அந்த வேற்றுமையை மதிக்க கற்றுக்கொள்வது பேதங்களை கடக்க உதவும். பால் வெறும் பண்பாட்டு அலகு தானே? அன்பே உலக நாகரீகம்.
– லீனா மணிமேகலை
இருட்டின் எண்ணற்ற சாயைகள்
தஞ்சை பிரகாஷின் “மிஷன் தெரு” நாவலுக்கு எழுதிய முன்னுரை.
நன்றி – வாசகசாலை பதிப்பகம்
“தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை” என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம். “தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும் மேல், தமிழில் எழுதிய எல்லாப் படைப்பாளிகளுக்கும் மேல் தஞ்சை பிரகாஷ்” என்று அவர் இருந்த திசை நோக்கித் தொழும் சாரு நிவேதிதா மற்றொரு பக்கம். உண்மையில் இதுபோன்ற மிகையுணர்ச்சிகளுக்கு எதிரானது பிரகாஷின் எழுத்து. மிக நிதானமான வாசிப்பை, கவனிப்பை கோரி நிற்கிறது பிரகாஷின் படைப்புலகம்.
மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வாய்மொழி கதையாடல்களாகவே புழக்கத்திலிருக்கும் “Taming of the shrew” வகைமை கதை. பெண்களை “அடக்க” “நல்வழிப்படுத்த” “கீழ்ப்படியவைக்க” “சொந்தமாக சிந்திக்கும் திறனை மரத்துப்போகச் செய்ய” “பக்குவப்படுத்த” உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் விதவிதமான வன்முறைகளைப் பிரயோகிப்பதை தான் “Taming of the shrew” என்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதி அதை இலக்கியமாக்க, இன்றுவரை அந்த மரபு உலகின் எல்லாப் பண்பாடுகளிலும், நாடகங்களாக திரைப்படங்களாக நாவல்களாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த படங்களில் எல்லாம் தொடர்ச்சியாக அவர் “போக்கிரி” பெண்ணாக வருவதும், நம் கதாநாயகர்கள் அவரை “அடக்கமான” பெண்ணாக மாற்றுவதையும் நாம் பார்த்திருப்போம். தமிழ் திரைப்படங்களில் இன்றுவரை சுய சிந்தனையுள்ள “திமிரான” பெண்கள் வன்புணரப்பட்டே “பாடம்” புகட்டப்படுகிறார்கள். பிரகாஷின் எஸ்தரும் அவ்வாறே வீழ்த்தப்படுகிறாள். சிறகுகள் நறுக்கப்படுகிறாள். தன்னைத்தானே தூர்ந்துப் போகவிட்டு சிதிலமாக்கி இடித்துக் கொள்ள தள்ளப் படுகிறாள். பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும் தான் உலக நியதி என்று வீடும், பள்ளிக்கூடமும், தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே “மிஷன் தெரு”. இதில் தஞ்சை பிரகாஷின் பங்களிப்பு, தன்னை தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் பாத்திரமாக எஸ்தரை உருவாக்கியது தான். அந்த கேள்விகள் தான் பிரகாஷ் நமக்கு விட்டுச் செல்பவை. கேள்விகளை உறைந்துப்போக விடாமல் சதா உயிர்ப்புடன் வைத்திருப்பதும் படைப்பாளியின் வேலை தான்.
கதை நிகழும் காலகட்டத்தையும் அதன் உள்ளடுக்கு சிக்கல்களையும் மிக நுட்பமான சித்திரமாக்குகிறார் ஆசிரியர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இரட்டை ஆட்சி. ஏதும் அறியாத தமிழ் சனங்கள் வெள்ளைக்காரர்களுக்கும் அடிபணிந்து, மராட்டியர்களுக்கும் கீழ்ப்படிந்து, கொள்ளையிடும் முஸ்லீம்களுக்கும் வேற்று அரசர்களுக்கும் நடுங்கி வாழ்ந்துக்கொண்டிருந்த காலத்தில் ‘சோற்றுக் கள்ளர்கள்’ என்று கேலி பேசப்பட்ட கிருத்துவக் கள்ளர் குடும்பத்துப் பெண்ணாக வருகிறாள் எஸ்தர். கீழ்சாதி என்று கருதப்பட்ட பள்ளு பறை சாதிகளுக்கு ஏசுவை மறுதலித்த கள்ளர்கள், தங்களுக்கென்ற புதிய பள்ளிக்கூடங்களை கிராமம்தோறும் நிறுவிக்கொண்டனர். துலுக்கர்களும் மராட்டியர்களும் பெண்களைத் துணியில் போர்த்தி மூடிவைத்திருந்தபோது, இந்துக்கள்ளர் சாதியில் பெண்களை வெளியில் அனுப்பாமல் வைத்திருந்தபோது, கிருத்துவக் கள்ளர் பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். எஸ்தரின் தந்தைக்கு அவளை சீமைக்கு அனுப்பி, ஆங்கிலம் படிக்கவைத்து ஒரு Madam ஆக்குவது தான் கனவு. பெண்களைக் “கொண்டு” போவதும், சிறைப்பிடிப்பதும், பூட்டிவைப்பதும், எட்டு வயதிலேயே கட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் சூழலில் எஸ்தர் மட்டும் பதினெட்டு வயது வரை யாருக்கும் படியாத கன்றுக்குட்டியாய் வலம் வருகிறாள். ஆங்கிலப் புத்தகங்களின் ஞானம், லத்தீன் – கிரேக்க மொழியறிவு, சங்கீதப் பாடங்கள், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த நோக்கம், சமத்துவம்-சகோதரத்துவம்-சமாதானம் என்ற பிரஞ்சு சிந்தனை, காதல், சுயதேர்வு என்று வாழ விரும்பும் எஸ்தரை “நீ விபசாரி. நீ கேவலம். உன் உடம்பு அசிங்கம்.ஏசு இதில் குடியிருக்க மாட்டார். உன் அழகு பாவம். அதைப்பார்த்தே பலர் பாவம் செய்கிறார்கள்.எனவே நீ பாவமாகிறாய். நீ பாவ மன்னிப்பு கேட்டு அழு” என்று முதலில் வேதபாடசாலை வாத்தியார் பழிக்கிறார்.அடுத்து,“ஒரு பொண்ணை கொழுக்கவுட்டா அவ்வளவு தான், கூரை ஏறி கோளிபுடிக்கக் கிளம்பிடுவா” என்று அவளின் தாய் கண்டிக்கிறாள். தொடர்ந்து,”பொட்டை நாயீ, போடி உள்ள, கட்டை துளுத்துப் போச்சா, தெருவில வந்து பேசினா வீச்சருவால எடுத்து சீவிப்புடுவேன்” என்று தெருவில் மாமா மிரட்டுகிறார். முடிவில், “ஓடுகாலி காலில் சங்கிலி போட்டு கட்ட வேணும்” என்று லாசரஸ் என்ற ராட்சசனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள். லாசரஸ், அவளது அபிப்பிராயங்களைக் குறித்து எந்தக் கவலையுமில்லாமல் அள்ளிக்கொண்டு போய் மூலை இருட்டில் போட்டு, மிருகம் வளர்ப்பதை போல வளர்த்து, குட்டிப்போட வைத்து, மாட்டை முகத்தில் கட்டுவதைப்போல கட்டி, பிதுங்க பிதுங்க அது முகத்தை இழுத்துக்கொண்டு சுற்றுவதை போன்ற பயங்கரமான வாழ்க்கையைப் பரிசளிக்கிறான். மிஷன் தெருவில் குடியமர்த்தப்பட்டு, தினமும் அடி, உதை எனப் பதினைந்தாண்டு கால திருமண சிறையில் உருவாகும் தன் மகள் ரூபி, அவளுக்கென துணையை தேடும் தருணத்தில் அவளை அடித்து உதைத்து தன் கணவனிடம் ஒப்படைக்கும் எஸ்தரின் Stockholm Syndrome இல் நிறைவுறுகிறது கதை. திருமணத்திற்கு முன் வரை தன் சுய தேர்வுக்காக எதிர்ப்பதும், ஓடுவதும், தப்புவதும், மீறுவதும், கொலை செய்வதற்கும் அஞ்சாதவளாய் நிற்பதுமாய் இருக்கிற எஸ்தர் வன்புணர்வின் மூலம் வசப்படுத்தப்படுகிறாள். அவளிலிருந்தே அவள் பிரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுகிறாள். அவள் கால்களின் இடையில் நேர்ந்த பலவந்த திணிப்பில் வஞ்சத்தைப் புரிந்துக்கொள்கிறாள். ஆனால் அதை தன் உடலின் வஞ்சமெனவும் கருதி மறுகுகிறாள். இதை மேலோட்டமாக உள்வாங்கும்போது வாசக மனம் துணுக்குறும். ஆனால் ஒரு திரைப்பட இயக்குனராக இந்தியா முழுவதும் “ரேப் நேஷன்” என்ற என் ஆவணப்படத்திற்காக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தித்து உரையாடிய அனுபவத்திற்குப் பிறகு எஸ்தரை இன்னும் ஆழமாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களிடம் தங்கள் உடல் மீதே ஒரு தனிப்பட்ட கோபமும், கையாலாகாத்தனமும், கழிவிரக்கமும் அவ்வப்போது பொங்கி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். வன்புணரப்பட்ட ஒவ்வொரு முறையும் தற்கொலை செய்துக்கொண்ட வேதனையும் விரக்தியும் வெட்டி வெட்டி இழுத்த எஸ்தரின் மீளாத துயரத்தை, நான் நேரடியாக சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்களின் கண்களிலும் பார்த்திருக்கிறேன். அத்துமீறப்பட்ட உடலும், எதிர்ப்பின் ஒவ்வொரு முனைப்பும் படுதோல்வியடைந்த வலியும் பெண்கள் காலம் காலமாய் சுமக்கும் சிலுவைகள். அந்தக் கொடும் உளைச்சலில் இருந்தே, எஸ்தர் தன்னை துச்சமாக எண்ணிய லாஸரஸைவிட தன்னை கொஞ்சமாகவேனும் “மதித்த” வெள்ளைக்காரத்துரையிடம் தோற்றுப் போயிருக்கலாம் என எண்ண வைக்கிறது. அதிகாரத்தின் முன் நூறு நூறு ஆண்டுகளாக பெண்ணை மண்டியிட வைக்கும் மிகச் சிக்கலான புள்ளியை பிரகாஷ் தொடுகிறார். பெண்ணைக் கொண்டே அதை விசாரணைக்கும் உட்படுத்துகிறார். எந்தக் கர்த்தரையும், எந்த ஜெஹோவையும், எந்த கிருஷ்ண மூர்த்தியையும், எந்த சைவ சிவசுந்தரத்தையும், எந்த சைன பௌத்த காளி கூலி மாடன், புலையன்,பாவாடைராயன், வாழ்முனி வங்கீசன், காட்டேரி, குரும்பன்,குள்ளன், தெரு சாமி வரை யார் கூப்பிட்டு அலறினாலும், எந்த காலத்திலும், எத்தனை ஆயிரம் கோடி வருடங்கள் கடந்தாலும் இதில் இருந்தெல்லாம் பெண்ணுக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்வியை அழுத்தமாக முன்வைக்கிறார்.
பிரகாஷ் சுட்டிக்காட்டுவதைப்போல ஒவ்வொரு மனிதனும், தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள். அந்த இருட்டில் என்னையும், நான் அறிந்த, நேசித்த, பிறந்த, பழகிய, வாசித்த, கூடி வாழ்ந்த எல்லாப்பெண்களின் சாயைகளையும் காண முயற்சிக்கிறேன். பதின்மூன்று வயதில் தன் தாய் மாமனுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டு, எந்த வழியில் குழந்தை தன் உடலில் இருந்து வெளியே வரும் என்று அறியாப் பருவத்தில் என்னைப் பெற்றதாய் சொல்லும் என் தாய் ரமா, தான் இழந்ததை எல்லாம் எனக்கு அளித்து விட வேண்டும் என கான்வென்டில் படிக்கவைத்து, நடனம் பாட்டு விளையாட்டு நாடகம் என எல்லாம் பயிற்றுவித்து நூறு மேடைகள் ஏற்றி அழகு பார்த்து, சாதிக்கப்பிறந்தவள் என தினமும் சொல்லி சொல்லி கனவுகளை வளர்த்துவிட்டு, எனக்குப் பருவம் வந்ததும் என் தாயமாமனுக்கு கட்டிக்கொடுத்துவிட வேண்டுமெனத் துடித்ததை, என்னைக் கட்டாயப்படுத்தியதை இன்றளவும் மன்னிக்க முடியாமல் இருக்கும் நான், தன் மகள் ரூபியை அவள் தேர்ந்தெடுத்த துணையிடமிருந்து பிரித்து அடித்து துவைத்து தன்னை அடிமைப்படுத்திய கணவன் லாசரஸிடமே அவளையும் ஒப்படைக்கும் எஸ்தரையும் மன்னிக்க இயலவில்லை. வாழ்க்கையை சகித்துக்கொள்வதும் வாழ்வு தான் என்றால் அதை எழுதுவதும் படைப்பு தான்.
லீனா மணிமேகலை
19/12/2016
What is it like to be a refugee?
DECCAN CHRONICLE. | MERIN JAMES
Published Dec 1, 2016, 12:00 am IST
Updated Dec 1, 2016, 12:50 am IST
https://www.deccanchronicle.com/entertainment/kollywood/011216/what-is-it-like-to-be-a-refugee.html
Leena Manimekalai’s project The Sunshine explores the life of a young man who flees from the war-torn northern Sri Lanka.
Chennai-based independent filmmaker, poet and actor, Leena Manimekalai, is all set to direct her second fiction feature film, The Sunshine, an Indo-French-Canadian Project. It was the only Tamil project out of the 19 picked from across Asia to be pitched at the Co-Production Market, at the National Film Development Corporation (NFDC) Film Bazaar, Goa. She talks to us about the reason behind writing the story.
On the film, The Sunshine
What it is to be a refugee in the age of genocide is a question that haunts me always. I sometimes wonder what is ‘home’ and what is ‘nation’, when I meet people who suddenly have nowhere to go. I have never heard of refugee birds or refugee animals or refugee insects!
Translating human trauma and displacement in the conflict times to film language can be a daunting challenge. But it is also a necessary one, as behind the rhetoric are real people, each with a unique and often tragic story to tell. The Sunshine is about a young refugee who flees from the war-torn northern Sri Lanka and embarks on a perilious journey through India, Nepal, Thailand towards an uncertain destination, leaving his childhood sweetheart on the shores that foam blood. The film looks back at the perils faced by Armstrong —a Sri Lankan Tamil — along with his epic odyssey from conflict and violence-ridden homeland, towards far corners of the world risking death, detention and deportation over the lands and seas. The Sunshine will explore the ultimate universal question how and why people get prepared to risk everything.
Shooting Schedule
The Sunshine is locally backed by SR Prabhu, of The Dream Warriors, who produced Joker, Kaashmora, Maya and so on. We will close the discussions and paperwork with our co-producers at the European Film Market-Berlinale and Cannes ‘Marche Du Film’ (Film Market), and hopefully go on floors mid-2017.
The cast and crew
Shobasakthi from the award-winning Dheepan, is the co-screen writer of the film and plays a parallel lead. Because of the magnitude of the project, as it happens in five countries, we will give out an international casting call soon.
Being the only Tamil project to be pitched at the NFDC Film bazaar, Goa:
NFDC Film Bazaar runs an international co-production market with focus on Asia and they invite applications annually from around the world. This year, among the 19, The Sunshine was the only Tamil project. It was a privilege to pitch to the row of German, French, Canadian, American, Brit and Chinese producers, sale agents and festival programmers.
On the response from the film bazaar:
I found it to be an an intense learning experience and the knowledge that was shared among the filmmakers and cineaste community is so unique. After the open pitch, based on the amount of interest the project generates, we were put on one-to-one meetings with producers and sales agents who were keen to collaborate. SR Prabhu, in-spite of being a successful mainstream producer, was there to take around 25 meetings and that was quite a rock-solid support to an independent filmmaker like me.
Being an Indie filmmaker
As a documentary junkie, I have been fiercely independent in my expression and modes of production. When I made my first fiction feature Sengadal/ The Deadsea in 2011, it was a big battle in terms of both production and distribution. I had to also take-up a long legal battle with CBFC to lift the ban initially.
I could never release it theatrically here in Tamil Nadu, though I did a limited release worldwide through crowd funding. Though one gets recognition and acclaim around the world in film festivals, it is very demoralising to a filmmaker if he or she is unable to reach out to deserving audience at the end of the day. Market is a big force and as an Indian, I am devising ways to winning it.