Filmmaker Leena Manimekalai’s Next, ‘The Sunshine’, To Narrate The Tale Of A Young Lankan Refugee
BY ASWATHY GOPALAKRISHNAN ON NOVEMBER 29, 2016
A young Sri Lankan refugee’s uncertain journey across three countries takes centre stage in an upcoming Indo-French-Canadian film. Titled The Sunshine, the film will be directed by poet-filmmaker Leena Manimekalai, and stars Shobasakthi aka Anthonythasan, who played the lead in Jacques Audiard’s Palm d’ Or winning Dheepan.
Director Leena Manimekalai on the sets of Sengadal
Co-produced by SR Prabhu of Dream Warriors Pictures, The Sunshine was the only one from Tamil Nadu among the 19 projects selected from all over Asia, to be pitched at the NFDC Film Bazaar held on the sidelines of the recently concluded International Film Festival Of India in Goa. “I am very excited about the outcome in Goa Film Bazaar. I hope this would open more doors for Independent filmmakers from Tamilnadu,” said Leena.
The Sunshine is centred around a young refugee who flees from the war-torn North Lanka and embarks on a perilous journey through India, Nepal and Thailand towards an uncertain destination, leaving his childhood sweetheart in his motherland. Anthonydasan, who is also one of the co-writers of the film, had starred in Leena’s debut feature film, Sengadal, too.
The film is scheduled to go on floors sometime in 2017. “I have started the pre-production works. It’s a massive project and the shoot will happen in five countries,” said Leena.
Leena is known for her hard-hitting documentaries on subjects ranging from feminism and Dalit issues to the plight of refugees and fishermen in the Palk Strait.
Leena’s 2013 documentary, White Van Stories, dealt with the subject of enforced disappearances caused by Sri Lankan civil war. For the documentary, which was premiered on Channel 4, she interviewed people who lost their family members and filmed the protests in in Jaffna and Colombo, carried out by the families of the vanished men and women.
NFDC’s Film Bazaar becomes indie cinema’s go-to place for funds
– Charmy Harikrishnan, Economic Times, Updated: Nov 27, 2016, 11.06 AM IST
https://economictimes.indiatimes.com/articleshow/55641481.cms?from=mdr
Justice Knows No Death
Link: http://naradanews.com/2016/11/justice-knows-no-death/
What I wrote on Tara’s death.
“The dead cannot cry out for justice, It is the duty of the living to do so for them”
It is the month of November and Transgender Day of Remembrance is just round the corner. Annually, Nov 20 is the day to memorialize those who have been murdered of anti-transgender hatred or prejudice. Tara, a 28-year-old transgender woman who was found severely burnt outside of Pondy Bazaar police station in Chennai and later died at Kilpauk Medical College on November 9 will be the latest addition to this list . It is indeed important to honor the dead and bring attention to the continued violence, but how would you transform the practices of a society that deny the very existence of the transgender community on day to day basis?
Transgender people in India are breaking new grounds at every level but it is such an irony that they need to be shielded from the very men in kakhi who are entitled to protect them. Over and again studies reveal that the biggest perpetrators of violence against transgender people are Police and law enforcing authorities. In Tara’s case there are several questions that remain unanswered when we swallow the Police version of suicide with out a pinch of salt. If at all Tara had any intention to commit suicide, why would she do it in front of a Police station? Ain’t the police supposed to take action when someone self-immolates in front of them? Who fetched her petrol in the wee hours of the day? Police had stopped her early in the morning accusing her of soliciting for sex work while she was trying to recharge her mobile phone. In a video clip ,which in all probability shot by a Policeman and circulated by the Police themselves, Tara is seen arguing with them.
The conversation goes on like this
Tara: Sir, give back my mobile phone and bike.
Police: We can’t give. Do what you can.
Tara: I won’t go from here.
Police: Bloody ombodu* , how dare you throw stones at a sub-inspecter ? (*Ombodu – number 9, a derogatory term used on transwomen and gender non-conforming males)
Tara: Sir, I don’t know anything about it. You give me the bike, I am leaving this place.
Police: We can’t, what will you do? It should be noted that the police use male pronoun to address Tara all along. She then sits in front of the police station and tries to cut her throat with a stone.
Tara: “I am bleeding, please give back my bike”;
Police: “Chi, get out, go and die”.
If the Police had recorded this piece of video, why isn’t there a video recording of the incident that led to Tara’s immolation? One Policeman is seen in the video asking how dare she throw a stone at an SI. Now who is that Inspector he is referring to and what is his connection with this incident? Activist Grace Banu (who has been reporting this whole violence on social media, while the mainstream media was busy ‘Trump’ing and ‘Modi’fying) had been informed that the CCTV camera wasn’t working from October 27, when she asked to show the footage. More you dig, more the solid pieces of evidnece surface. It was nothing but murder, Tara was murdered by the Police.
Half a million strong transgender community according to 2011 census, has always endured police violence in this country. Some of the colonial laws that still exist have crudest provisions making transpeople vulnerable to the Police harassment, violence and extortion. Let alone the basic sensitivity towards the rights of transgender communities, Police do not even seem to treat them as fellow-humans. The Police violence is in fact the reflection of the larger prejudice of Indian society towards the transgender community.
Nearly two years after the Supreme Court’s landmark ruling that transgender people should be recognized as seperate gender attacks against transpeople continue to increase. This feudal, casteist, patriarchal, class-divided Indian society has always been denying the constitutional rights to transgender people, including their rights to vote, own property, to marry, and to claim a formal identity document like passport . They have never been able to avail the benefits of various welfare schemes such as subsidised food, education, employment, or healthcare. This ultimately pushes them either to beggery or sex work, exposing them to the violent interventions of the law enforcement authorities.
One has to remember that Tara’s has been murdered in Tamil Nadu, the only state in the country which has a functioning Transgender Welfare Board . It is such a shame that we are living in a world where in every three days, one transgender person is reportedly murdered of hate.None of us are innocent. We are accountable. Let us not let the Police get away with yet another murder, not anymore . No one should be subjected to violence because of their gender identity or sexual orientation. The dead cannot cry out for justice, It is the duty of the living to do so for them.
(With the inputs from LGBT Activists Gee Semmalar, Grace Banu and Moulee)
அன்பின் பெருங்கோபக் காளி – மாஹாஸ்வேதா தேவி
நன்றி – விகடன் தடம்
2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. “ரேப் நேஷன்”(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வதுதான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து வைத்திருக்கும் நோட்டுப் புத்தகங்கள், இங்க் பேனாக்கள், அவர் பேசும்போது சுருங்கி விரியும் முகரேகைகள், கண்களின் மாறா ஒளி, கையசைவுகள் என அவரின் தரிசனத்தை நொடி நழுவாது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததில், கேமிரா இத்யாதிகளை எடுத்துச் சென்றதையும், என் குழுவினரையம் சுத்தமாக மறந்துவிட்டேன். அவருடைய “திரௌபதி” சிறுகதையை மணிப்பூரின் ஆகச்சிறந்த நாடக ஆளுமைகள் கன்ஹையாலாலும் சாவித்திரியும் மேடையேற்றியதைப் பார்த்த அதே பரவசத்துடன் அந்தக் கதையை அவர் எழுதிய சந்தர்ப்பம் குறித்துக் கேட்டேன். உடனே அவர் அந்த சிறுகதை இருந்த தொகுப்பை அருகில் இருந்த அலமாரியிலிருந்து தேடி எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ… நீ ஒரு ஆம்பளையா?” என்று மஹாஸ்வேதா தேவியின் திரௌபதி தன் சிதைக்கப்பட்ட முலைகளோடு நின்று ராணுவ அதிகாரியைக் கேள்வி கேட்பதையும் “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளன்ட்டர் பண்ணு” என்று ரத்தம் ஒழுகும் தன் குதறப்பட்ட உதடுகளால் அதிகாரியின் முகத்தில் துப்புவதையும் சிறுகதையின் காட்சிகளாக அவர் வங்காள மொழியில் வாசித்துக்காட்ட, அது மணிப்பூர், ஈழம், காஷ்மீர், போஸ்னியா, காங்கோ, சிரியா என உலகமெங்கும் அதிகாரத்தால் வேட்டையாடப்படும் பெண்ணுடல்களின் ஒட்டுமொத்த அசரீரியாக ஒலித்தது. 2004-ல் மணிப்பூரில் தங்ஜம் மனோரமா ராணுவத்தால் மானபங்கப்பட்டு கொல்லப்பட்டபோது, தாய்மார்கள் ஒன்றுகூடி திரௌபதிகளாக மாறி நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது மஹாஸ்வேதா தேவியின் வார்த்தைகளைத்தான் தங்கள் குரலாயுதங்களாகவும் கொடிகளாகவும் பயன்படுத்தினர் என்பதை நான் நினைவுறுத்தியபோது அவர் கண்கள் பனித்தன. “வேறெதற்காக எழுதுகிறோம்” என்று மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் அவர் கேட்டபோது ஒரு செவ்வியல் ஓவியம் போல என் மனதில் ஆழப்பதிந்து விட்டார். தமிழில் நான் எழுதிவருகிறேன் என்றும், 1998-ல் ஒரு கல்லூரி மாணவியாக, இயக்குநர் கோவிந்த நிகலானியின் “ஹசார் சௌரசி கி மா” திரைப்படத்தை ஒரு ஃபிலிம் சொஸைட்டி திரையிடலில் பார்த்த கணத்திலிருந்து, அவரைப் பற்றிய தேடல் தொடங்கியது என்றும் மெல்ல என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவரின் கைகள் என்னைப் பற்றிக்கொண்டிருந்தன. “ஆங்கில மொழிபெயர்ப்பிருந்தால் உன் கவிதைகளை எனக்கு அனுப்பிவை” என்று ஒரு சீனியரின் அக்கறையோடு கேட்டபோதுதான், ஆதர்சங்களை சந்திக்கும் கனவொன்றின் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான் சகஜமாகி நிஜ உலகத்திற்குத் திரும்பினேன். வந்த வேலையைப் பற்றிய பிரக்ஞை தட்ட படக்குழுவினரைத் தேடிய வேளை, அந்தி சாய்ந்து இரவு படரத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்பை அடுத்த நாள் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டபோதும் அவர் முகத்தில் அதே புன்னகை.
எழுத்து மட்டுமே ஒருவரை எழுத்தாளராக்கிவிட முடியாது என்ற என் நம்பிக்கையின் உயிர்வடிவம் மஹாஸ்வேதா தேவி என்பதை அவரை வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உணர்ந்திருக்கிறேன். வெறும் பிரசார எழுத்து, மானுடவியல் ஆய்வுக்குறிப்புகள் என்றெல்லாம் அவரின் எழுத்துக்களை இலக்கியத்திலிருந்து சதா வெளியே தள்ளிக்கொண்டிருந்த விமர்சனங்களும் வாசிக்கக்கிடைத்தன. ‘1084 இன் அம்மா’, ‘காட்டின் உரிமை’ இரண்டு நாவல்களும் சாகித்ய அகாதெமியின் வெளியீடுகளாக சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வந்திருந்தாலும், தமிழில் பொதுவாக வெளிவரும் இப்படியான மொழிபெயர்ப்பு நூல்களின் வாசிப்புத்தன்மைக்கு அஞ்சி, Breast Stories, Imaginary Maps, Old women, Outcast போன்ற அவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின் உதவியை நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வகை (Genre) ஆவணப்புனைவு( Docu-fiction) என்பதால் மஹாஸ்வேதா தேவி விரைவில் என் ஆதர்சமானார். கடுமையாகச் சுரண்டப்படுபவர்கள், தோல்வியை ஏற்க மறுப்பவர்கள் , அதிகாரம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த விளிம்புநிலை ஜீவன்கள்தான் மஹாஸ்வேதா தேவியின் நாயகர்கள். நூறு நாவல்கள், இருபது சிறுகதைத் தொகுதிகள் என மனுஷி ‘காட்டு’த்தனமாக உழைத்திருப்பதைக் கண்டு மலைத்துப் போனேன். காதல் முறிவுகள், விவாகரத்து, போராட்ட வாழ்வின் தொய்வுகள், கைவிட்டுப் போன நட்புகள், தன் மகனுடனான சிக்கலான உறவு, அன்பின் போதாமைகள், தனிமை, விரக்தி என எல்லாவற்றையும் எழுதி எழுதியே கடந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சத்திய வேட்கை போல சராசரி 15 மணி நேரம் எழுதிய மஹாஸ்வேதா தேவி, “என் எழுத்துக்களை நான் நாள்தோறும் சந்தித்த எளிய மனிதர்களே எழுதினார்கள்” என்று சொல்வதின் மாண்புக்கு முன் அவருக்குத் தரப்பட்ட பத்ம, ஞானபீட, மகசேசே விருதுகளும், நோபல் பரிசுக்கான பரிந்துரையும் மிகச் சாதாரணமானவையே.
இது நினைவுகள் என்னை பரிகசிக்கும் காலம்
ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை
(மொழிபெயர்ப்பு)
“நேற்றென்பது ஆயிரத்தியொரு சாத்தியங்கள் நிரம்பியிருந்த நாளல்லவா? அதுதானே வாழ்க்கை. ஒன்றும் மாறிவிட வில்லையே? பின்பு எதற்காக, அவ்வளவு பலவீனமாகவும், சுவாரஸ்யமற்றும், அதிபயங்கரமான வெறுமையுணர்வோடும், மலேரியா காய்ச்சல்போல இந்த நாள் பரவ வேண்டும்? ஏனெனில் எல்லாவற்றையும்விட மோசமானது தனிமை”
மீள வாழ்தல்
வார்த்தைகள். வேதனையில் இருக்கும் எழுத்தாளரிடமிருந்து பிறந்தவையா என எனக்குத் தெரியாது, ஆனால் அறிவேன். என்னுடைய தொண்ணூறாவது வயதில், மீள வாழ வேண்டும் என்ற எனது வேட்கை விஷமமானது. அதிசயங்களின் வலைகளில் சிக்கிய பட்டாம்பூச்சிகள் என்ற பாடல் வரியைப் போன்று எனது ஆயுளும் ஒரு விருப்ப வேட்கைதான். இது ஒரு பக்கம் இருக்க, எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமான நாட்கள் வாழ்வதின் பேரில், எவ்வளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறேன் என்று சற்று நினைத்துப்பார்க்கிறேன். எண்பத்தியேழு வயதில், என் முன்னெடுப்புகள் அநேகமும் நிழல்களை நாடிய பின்வாங்கல்கள்தாம். அபூர்வமாகவே சூரிய தரிசனம். இளம் வயதுப் பெண்ணாக, தாயாக, நான் ஒருபோதும் முதுமைக்குப் பின்வாங்கியதில்லை. சில சமயங்களில் முதியவளாக, பார்வை மங்கியவளாக, காது சரியாகக் கேளாதவளாக நடித்துக்காட்டி என் மகனைச் சிரிக்க வைத்ததுண்டு. கண் கட்டி ஆடும் விளையாட்டென, காற்றில் கைகளைத் துழாவி நினைவுகளைப் பரிகசித்திருக்கிறேன். கண நேரத்திற்குள், அதிமுக்கியமான விஷயங்களை மறந்திருக்கிறேன். அன்றைய வேடிக்கைகளிலிருந்து இன்றைக்கு இங்கு நகர்ந்துவந்திருக்கிறேன். வாழ்க்கை ஒரு மீள் செயல். நான் என்னை மீட்டுக்கொள்கிறேன். நடந்தவைகளில் இருந்து, நடந்திருக்கக் கூடியவையிலிருந்து, நடக்காததிலிருந்து என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.
இது நினைவுகள் என்னைப் பரிகசிக்கும் காலம்
பல எழுத்தாளர்கள், என் கதைமாந்தர்கள், நான் நேசித்து, கூடியிருந்து, இழந்த மனிதர்கள் எல்லோரும் ஆவிகளாக எனக்குள் தங்கி வாழ்கிறார்கள். குடியிருப்பவர்களின் அந்தரங்க உரையாடல்களைச் சதா கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய வீட்டைப்போல சில சமயங்களில் என்னை உணர்கிறேன். அது ஒன்றும் பெரிய பாக்கியமல்ல.
ஆனால் ஒருவர், வலிமையின் இறுதியில் தான் நிற்பதாய் உணரும்போது என்ன நடக்கும்? வலிமையின் இறுதியென்பதோ என்றும் முற்றுப்புள்ளியல்ல. ரயிலில் இருந்து இறங்க வேண்டிய கடைசி நிறுத்தமுமல்ல. சற்று வேகம் தாழ்த்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்; உயிர் ததும்பிநிற்கும் தருணம் அது; “நீ தனிமையில் இருக்கிறாய்” என்ற அசரீரி.
நான் பிறந்து வளர்ந்த சூழலில், இன்றைய என் பரிணாம வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நான் வீட்டிலேயே மூத்தவள். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. என் முதல் பாலியல் அனுபவத்தை என் குடும்பத்திற்குள்தான் பெற்றேன். இளம்பிராயத்தில் இருந்தே நான் பாலியல் வசீகரத்தோடு இருந்தேன். மற்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்க, நானும் அப்படித்தான் என்னை உணர்ந்தேன். தாகூரால் மிகவும் ஈர்க்கப்பட்ட காலங்கள். சாந்திநிகேதனில் படிக்கும்போது காதலில் விழுவதும் எழுவதுமான ஆர்வத்துடிப்பு நிறைந்தவளாய் இருந்தேன். பதின்மூன்று வயதில் இருந்து பதினெட்டு வயதுவரை என் தூரத்து உறவுப் பையன் ஒருவனைத் தீவிரமாகக் காதலித்தேன். தற்கொலை மனோபாவம் கூடிய குடும்பப் பின்னணியில் வந்ததால் அவனும் தற்கொலை செய்து இறந்துபோனான். ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினார்கள். நான் அவன் அன்பை மறுதலித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டான் என்று சொல்லிக் காட்டினார்கள். ஆனால் அது உண்மையல்ல. அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமாக இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன். நேசித்தவன் வீணாகத் தன் உயிரைப் போக்கிக்கொண்டது என்னுள் மரணஅடியாக இறங்கியது. மொத்தக் குடும்பத்தின் சுட்டுவிரலும் என்னை நோக்கி நீண்டிருந்தது. பதின்வயதுகளில் தன் உடலின் கவர்ச்சியைக் குறித்த எந்தக் கவனமும் இல்லாத இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று என் பெற்றோர்களும் உறவினர்களும் மனம் கசந்தனர்.
எல்லாமும் ஏதோ ஒரு வகையில் அழுந்தப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க நெறிகள் பெரும் மோசடியானவை.
எழுத்துதான் என் நிஜமான உலகம். நான் முன்னும், பின்னுமாக வாழ்வதும், மீள்வதும் அங்குதான். நான் எழுதும்முறை விசித்திரமானது. எழுதுவதற்கு முன் எக்கச்சக்கமாகச் சிந்திப்பேன். குழம்பித் தவிப்பேன். மூளையில் படிகம் போல தெளிவாக எழுத்து உருவாகும்வரை அதனுடன் மல்லுக்கட்டுவேன். ஓயாது ஆய்வுகள் செய்வேன். மக்களைச் சந்திப்பேன், பேசுவேன், குறிப்புகள் எடுத்துக்கொள்வேன். முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ சேகரித்தவற்றையெல்லாம் விரித்து எழுதுவேன். அதற்குப்பின் பெரும்பாலும் நான் நிறுத்துவதில்லை. நான் வாசித்ததும், நேரடி அனுபவங்களும், ஞாபகங்களும், தேடிப்பெற்ற தகவல்களும் எழுதும்போது கைக்கொடுக்கும். எங்கு சென்றாலும், என் மனம் எழுத்தையே திட்டமிட்டுக் கொண்டிருக்கும். கூடவே மறதியும் உண்டு. உண்மையில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். யாருக்கும் நான் கடமைப்பட்டவளில்லை. சமூகத்தின் எந்த சட்டதிட்டங்களும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. நான் விரும்பியதைச் செய்தும், வேண்டியதை எழுதியும், நினைத்த இடங்களுக்குச் சுற்றியும் வந்திருக்கிறேன்.
நான் சுவாசிக்கும் காற்று வார்த்தைகளால் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக, ‘பர்னானர்’ என்ற வார்த்தை பலாசு மரத்தால் ஆனது. இது ஒரு வினோதமான சடங்குமுறையைக் குறிக்கும் சொல். ஒரு மனிதன் ரயில் விபத்தில் இறந்துவிட்டால், சடலத்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாத சூழலில், அவனது உடலைப் பலாசு மரத்தின் இலைகளால் செய்து ஈமச்சடங்குகளை முடிக்கிறார்கள்.
’பாப் புருஷ்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு நாட்டுப்புற நம்பிக்கையைக் குறிக்கும் சொல். நித்திய ஜீவனாக சபிக்கப்பட்ட அவன், மறைவான், தோன்றுவான். மற்றவர்களின் பாவங்களைக் கண்காணிப்பான். சின்னச் சின்ன மீறல்களையும் கணக்கு வைத்துத் தண்டிப்பான். ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொளுத்தும் வெயிலில் கம்பு ஒன்றில் கட்டிப்போட்டு தண்ணீரோ தீவனமோ காட்டாது தண்டிப்பான். உண்மையில் பாப் புருஷ் என்பவர் ஒரு நபராக இருக்க முடியாது. அச்சொல் ஒரு குறியீடுதான்.
வங்காள மொழியில்தான் எவ்வளவு அழகழகான சொற்கள். ‘சோரத்’ என்றால் பலகை என்று பொருள். தக் சங்கராந்தி. தக் என்றால் சதா விழிப்புநிலையில் இருப்பது. மனம் விழித்திருப்பவர்களுக்கு மட்டும்தான் ஒரு குரல் கேட்குமாம். ‘இன்று புதியதொரு நாள், என்ன செய்ய காத்திருக்கிறாய், செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்தாயா’ என்றெல்லாம் அந்தக் குரல் கேள்வி கேட்குமாம்.
‘கர்பா தான்’ என்ற சொல் மிக சுவார்ஸமானது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கருவிடம், ‘நீ பெண் குழந்தையாகப் பிறந்தால் இந்தந்தப் பரிசுகளைத் தருவேன்’ ‘நீ ஆண் குழந்தையாகப் பிறந்தால் அந்தந்த பரிசுகளைப் பெறுவாய்” என்று உறுதி கூறுவதைத்தான் ‘கர்பா தான்’ என்று குறிப்பிடுகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தை இதைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், பிறந்ததும் பரிசளிப்பதாகச் சொன்னவர்களைத் தேடி அதற்குரியவற்றை கேட்டு வாங்கிக்கொள்ளும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது .
நமது நாட்டில் சுவையான கதைகளுக்கும் சொற்களுக்கும் பஞ்சமே இல்லை. மகாராஷ்டிராவின் பார்தி பழங்குடிகளை எடுத்துக்கொள்ளுங்கள். பார்தி சமூகத்தில் பெண்குழந்தைக்கு ஆக வரவேற்பு. கருவுற்றிருக்கும் பெண்ணின் கணவன், பிறக்கப்போகும் குழந்தை பெண் என்றால் இவ்வளவு விலை என்று ஏலம் விடுவது நடைமுறையில் இருக்கிறது. பேட் கி பாஜி என்பார்கள். கருவின் கனியை ஏலம் விடுவதை, நிலம் கோரே டிச்சே என்று அழைக்கிறார்கள்.நரகத்திற்கு நிறையப் பெயர்கள் இருக்கின்றன. ‘ஓஷி பத்ரா பென்’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓஷி என்றால் வாள். பத்ரா என்றால் வாள்போன்ற இலைகள். இறந்துபோன ஆன்மா, தான் செய்த பாவங்களுக்காக, வாள் இலைகள் நிறைந்த காட்டுக்குள் கிழியக் கிழிய நடந்துபோகவேண்டும் என்ற மொத்த அர்த்தத்தையும் ‘ஓஷி பத்ரா பென்’ தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது.என்னைப் பாதிக்கும் சொற்களைக் கடக்கும்போதெல்லாம், அவற்றைக் குறித்துவைத்துக்கொள்வேன். எத்தனை எத்தனை நோட்டுப் புத்தகங்கள். கோட்டோ கதா. எண்ணிலடங்கா வார்த்தைகள், எண்ணிலடங்கா ஒலிகள். நான் வார்த்தைகளைக் கர்மசிரத்தையாகச் சேகரிப்பவள்.
கனவு காணும் உரிமை
நீண்ட காலமாக ஒன்றைக் குறித்து எழுத வேண்டும் என்று சிந்தித்து வருகிறேன். உலகமயமாக்கலின் கோரங்களை எப்படிச் சமாளிப்பது? ஒரு மையமான இடத்தில் துண்டு நிலத்தைக் கைப்பற்றி, புற்களால் அதை மூடி அங்கு ஒரு ஒற்றை மரத்தை நடலாம். அதில் உங்கள் மகனின் சைக்கிள் ஒன்றைக் கிடத்தலாம். ஒரு ஏழைக் குழந்தை அங்கு வந்து சுதந்திரமாக விளையாடட்டும். அந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் வந்தமரட்டும். சின்ன ஆசைகள்; சின்ன கனவுகள். நம் எல்லோருக்கும் உண்டு தானே?
எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை, பண்பாடுகளை எழுதிவருவதாக பேசுகிறேன். அதில் எவ்வளவு உண்மை, அல்லது பொய் அல்லது அதிகப்படி என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் மேலும் சிந்தித்து எதையும் விளக்குவதற்கு முற்படுகையில் திண்டாடிப்போகிறேன். தயக்கமும் தடுமாற்றமும் என்னை ஆட்கொள்கின்றன. நம்மைப் போன்ற தொன்மையான மூத்தப் பண்பாடுகள் நிறைந்த சமூகத்தில், எனது நம்பிக்கை என்பது ஒன்றே ஒன்றுதான். அது மனிதநேயம் மட்டும்தான். பரஸ்பர உரிமைகளை ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு ஏற்றுக்கொள்ளும் மாண்பு.
மனிதர்களுக்குக் காண வேண்டியவற்றைக் காண்பதற்குக் கண்கள் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் எளிய மனிதர்களின் மிக எளிய கனவுகளை நான் கண்டுவருகிறேன். அவர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறார்களோ எனத் தோன்றும். ஆனால், அவற்றில் சில தப்பித்திருக்க வேண்டும். சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறியிருக்க வேண்டும். பதேர் பாஞ்சாலி நாவலில், ஓடும் ரயிலை கண்கள் விரிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் துர்கா. தூக்கத்திற்காக ஏங்கும் ஒரு முதிய பெண். நீண்ட காத்திருப்புக்குப் பின் தனக்குரிய பென்ஷன் பணத்தைப் பெற்றுவிடும் ஓய்வுபெற்றவர். காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்? அவர்களின் போக்கிடம் என்ன? நக்சலைட்டுகள் செய்த குற்றம் என்ன? அவர்கள் கனவு காணத் துணிந்தவர்கள். அவர்களின் கனவுகளிலிருந்து அவர்களை விலக்குவதற்கும் அனுமதிப்பதற்கும் நாம் யார்? இப்படிப்பட்ட சாதாரணர்களின் சாதாரண அபிலாஷைகள்தான் எனக்கு முக்கியம்.
கனவு காணும் உரிமையே அடிப்படையானதென பல வருடங்களாக, தொடர்ச்சியாக, அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிவருகிறேன்.
கனவு காண்பதற்கான உரிமை! வாழ்விலும் இலக்கியத்திலும், இதுவே என் முழுமுதல் போராட்டம்.
சிச்சிலி – கவிதை தொகுப்பு வெளியீடு
புகைப்பட வீடியோ – புகைப்படக்கலைஞர் பிரபு ராமகிருஷ்ணன் தொடுப்பு-