To Leena Manimekalai
In a very holy land
In a very pious place
One hundred thirty crore people live
Sensitive, religious, courageous and non-sensuous.
We get hurt
And rightly so
When a polymorph smokes
And a strange man named Zubair
Says the truth
We are very decent people
We kiss in private
We kill in public.
We worship our goddesses.
We are fine with female infanticide
We are very tolerant
No one ever has been lynched here
for their names!
We are champions of freedom of speech!
We never celebrate violence.
Three days of peace conclave happened
In Haridwar
Under the holy presence of some
Holy men
No one has called for genocide there.
We, one hundred and thirty crore people
are very soft-hearted,
You must agree, Leena!
We boo our girls for being a lesbian
and we are the highest dowry payer!
This is the story of a noble country
You must understand, Leena!
How dare you, Leena!
How can your goddess work in a pride march!
About the poem: This poem is in solidarity with Leena Manimekalai who is getting a lot of flak for the poster of her movie.
Moumita Alam is a poet from West Bengal. Her poetry collection The Musings of the Dark is available on Amazon
சிச்சிலி
கால உறைவிலிருந்து எழுந்து முன்னே வந்ததுபோல நவீன கவிதையின் பாவனைகளையும் முற்றாக உதறி நம் காலத்தின் காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார் லீனா மணிமேகலை.காதல் உள்ளிட்ட சமகால மனித உறவு நிலைகள் இதுவரையான கவிதையின் சட்டகங்களுக்குள் பொருந்தவியலா அளவுக்குச் சிக்கலை அடைந்துவிட்டனவோ என்ற ஐயம் உண்டு. அந்த வகையில் லீனாவின் இந்த நூறு கவிதைகள் ஒரு தாவலை நிகழ்த்தியிருக்கின்றன. இக்கவிதைகளில் காதல் தன் ஆதிக் குணம் மாறாத பெரு வேட்கையாகவே நிகழ்கிறது. ஆனால் பிரமாணிக்கமாயிருப்பது இங்கு ஒரு பொருட்டல்ல,வலிகளும் துரோகங்களும் பிரிவுகளும் கூடத்தான்.யதார்த்த உலகின் தீவிரமான துயர்களுக்கு மெய்நிகர் உலகின் இளைப்பாறலை,ஆற்றுப்படுத்தலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கப் பத்தாண்டுகளின் மனிதனது உறவு நிலைகள், குறிப்பாக ஆண்-பெண் உறவு, கடும் சிக்கலான வடிவங்களை அடைந்திருக்கையில், அவற்றை நோக்கிய புரிதலை முன்வைத்த கவிதைகளாகவும் லீனாவின் இந்தக் கவிதைகளைப் பார்க்கலாம். டி. எஸ். எலியட்டின் வரியொன்றில் வருவதைப் போல நினைவும் இச்சையும் தீவிரமாகக் கலந்து நிற்கும் வெளியாக இக்கவிதைகள் இருக்கின்றன. மொழியும் வெளிப்பாட்டின் தீர்க்கமும் பாடுபொருட்களும் இக்கவிதைகளை நம் காலத்துக் காதலின் உன்னத சங்கீதங்களாக (Psalms) எண்ண வைக்கின்றன.
– கவிஞர் அசதா
(ஜூலை 2016)
நற்றிணை பதிப்பகம்
விலை 100
കൂത്തച്ചികളുടെ റാണി
A collection of fifty poems of Leena Manimekalai, in Malayalam translation, was brought out by the foremost publisher in Kerala, DC Books, in September, 2014, titled Koothachikalude Rani ( കൂത്തച്ചികളുടെ റാണി). Bhaskaran Bara, well known illustrator/painter in Kerala did the cover for Koothachikalude Rani. N. Ravi Shanker did the translations for കൂത്തച്ചികളുടെ റാണി. He is a poet in his own right in English having brought out a collection ‘Architecture of Flesh’ in 2015. He is also known for his translation of the Tamil dalit writer Bama’s short stories in English, published as ‘Harum ScarumSaar and Other Stories’ by Women Unlimited, New Delhi. His translations from Tamil also appear in Oxford University Press’s Anthology of Tamil Dalit literature and Penguin’s Anthology of South Indian Dalit literature.
தேவதைகள்
சிறந்த சர்வதேச ஆவணப்படத்திற்கான தங்கச்சங்கு விருது, சிறந்த எதிர் சினிமாவிற்கான ஜான் ஆபிரஹாம் விருது, கென்யாவின் “Women Building Peace” ஜூரி விருது, ஜெர்மனியின் மூனிக் சர்வதேச விழாவில் Horizon விருதுக்கான பரிந்துரை, ஆஸ்திரேலியாவின் ஆசிய பசிபிக் ஸ்கிரீன் விருதுக்கான முன்தேர்வு, சென்னை தேசிய ஆவணப்பட விழாவில் One Billion Eyes விருது, ஆகிய சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற ஆவணப்படத்தின் திரைக்கதை வடிவம் இந்தப் புத்தகம்.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச்சங்கு விருதின் பாராட்டு பத்திரத்திலிருந்து சில வரிகள்…”தமிழ்க் கலாசாரத்தின் கட்டுகளிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொண்ட மூன்று அசாதாரணப் பெண்களை தேவதைகளாக வரிக்கிறார் இளம் படைப்பாளி லீனா மணிமேகலை. இந்த மூன்று பெண்களும் முன்மாதிரிகளிலிருந்து விலகி தங்களின் முழு சக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும்படி அவர்களுடையதேயான செயற்கைத்தன்மையற்ற நம்பகத்தன்மைமிக்க படைப்புத்தளத்தை உருவாக்கி காட்டியுள்ளார் இயக்குனர்”
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)
அந்தரக்கன்னி
அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான். அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள் பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின் ஒப்புதல் இருந்தால்தான்.
– கவிஞர் மனோ மோகன்
(மே 2013)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 100