உலகின் அழகிய முதல் பெண்
November 3, 2010
இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவி மனத்தின் கடடற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாசாரத்தின், பாலியல் முகத்தின் கரும்புள்ளிகளை வெடிவைத்து தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச்சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாசாரத்திற்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாக கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம்.
– கவிஞர் சமயவேல்
(அக்டோபர் 2010)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 70