ஒற்றையிலையென
லீனா மணிமேகலை கவிதைகள் மீது கவனம் செலுத்தும் முன்பு, ஒரு தன்னிலை மறுவிசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தவையாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒளி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் “பெண்ணெழுத்து” என்ற கருத்துருவம் தமிழில் வலுப்பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் பொருட்படுத்தக்கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலைக் காண்கிறேன்.
– கவிஞர் சுகுமாரன்
( நவம்பர் 2003)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை: 60
ஒற்றையிலையென
லீனா மணிமேகலை கவிதைகள் மீது கவனம் செலுத்தும் முன்பு, ஒரு தன்னிலை மறுவிசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தவையாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒளி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் “பெண்ணெழுத்து” என்ற கருத்துருவம் தமிழில் வலுப்பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் பொருட்படுத்தக்கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலைக் காண்கிறேன்.
– கவிஞர் சுகுமாரன்
( நவம்பர் 2003)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை: 60