சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்

பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன் 

17/11/2014               

விஞர்இயக்குனர்களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலைகடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர்எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர்இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம்அம்பேத்காரியம்க்யுயர்(Queer) பெண்ணியம்என தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர்தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார்.  ‘செங்கடல்‘ என்ற முழு நீள திரைப்படத்தையும்வெள்ளை வேன் கதைகள்தேவதைகள்பெண்ணாடிபலிபீடம் என பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களையும்நான்கு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்சிகாகோ பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸாஷா எபிலிங்கால்  இவரின் கவிதைகள்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு  புத்தகமாக வெளிவரவிருக்கின்றது. “கூத்திச்சிகளோட  ராணி” என்ற தலைப்பில் மலையாளத்திலும் இவரின் கவிதைகள்  வெளிவந்திருக்கின்றன

உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?

லீனா மணிமேகலைவயதுக்கு வந்த நேரம்என் அம்மா அருகில் இல்லைகிராமத்திற்கு ஏதோ காது குத்திற்குப் போயிருந்தார்அப்பாவிடம்  கிலி பிடித்த குரலில், “பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்,” என்று சொன்னேன். ‘வெரிகுட்‘ என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்து கேட்ட ஒரே கேள்வி, ‘நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய்சரியான நேரத்தை சொல்லுசாத்திரம் எழுதனும்’  என்பதுதான்இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லைஅப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து ஏதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள்உங்கள்  கேள்வி இதைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

உங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்ததுஇன்றைய மனநிலையில்  அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

லீனா மணிமேகலைபெரும்பாலும் முதல் காதல்அந்த காதல் தந்த முத்தம்ஆண் பெண் உறவுஇருப்பு குறித்தானவை  குழந்தைப் பருவ வாசம் கூடியவைஎன் சதுரகிரி மலை போலஅத்தியாறுபோலபுன்னை மரம் போலமாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சிஅந்தந்த காலக்கட்டங்களின் சாட்சிதானே எழுத்தும்ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககாலம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.

பெரும்பாலும் ஆண்களே இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள்  மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள்தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக  இருந்தன?

லீனா மணிமேகலைபிறந்த குழந்தையை ஆணாபெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்அதே மனநிலைதான் இலக்கியத்திலும்கலைத்துறையிலும் நீடிக்கிறதுசதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவதுஎங்கிருந்து உள்ளேறுவதுஎப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன்கிடைத்தால் சொல்கிறேன்மற்றபடி ஆண்  பெண் இருமை எதிர்வுகள் அடிப்படையில் இனியும்  படைப்புலகம் இயங்குவது அபத்தமானதுஆபத்தானதுஆண் மையப் பார்வை பாலின சிறுபான்மையினரை மறுதலிக்கும் பார்வையும் கூட.

இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயத்தங்கள்  அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?

லீனா மணிமேகலைஉரையாடலில் எனக்கு தீவிர மோகம்அதுவே என் இன்றைய எல்லா ஆயத்தங்களின் அடிப்படையும்பலவிதமாகபல்வேறு உயிர்களிடம்என்னை சுற்றியுள்ள இருப்புடனும்இன்மையுடனும்உரையாடும் முயற்சியாக எழுத்துபிம்பம்எண்ணம்செயல், கருத்துஅரசியல்வாசிப்புபிரக்ஞைஇன்ன பிறவையையும் பார்க்கிறேன்சினிமாவுக்கென்ன நூற்று சொச்சம் வயதுதானே ஆகிறதுஎழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம்மனித வாழ்வுக்கு  நாற்பதாயிரம்ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள்தொழில்நுட்பம் எதுவும் வசப்படாதபோதும் உரையாடிக்கொண்டுதானே இருந்தோம்புதிய சொல்லென்பதோபிம்பமென்பதோ ஏதுமில்லைநினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடுஅதைக்கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.

தொடக்ககால ஆயத்தங்கள் என்று சொல்லப் போனால்என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில்பாடியே புரட்சியை  கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன்மணிக்கணக்கில் தலைவர்கள்  பேசி மக்களை கலைக்கிறார்கள்என் பாடலில் மக்களைத் திரட்டி ஒன்றுபட வைக்க முடியும்  என்ற  உறுதியோடுதான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன்.  தோழர்கள்  கே..குணசேகரனும்எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக்  கூடியவர்கள் என்று தோன்றும்சொற்களின் மீதும்இசையின் மீதும் அசைக்க முடியாத  நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை  இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள்தாம்பாரதிபாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்ததுஅவையில் பேச்சாளியாய்என் முன்னே கூடியிருக்கும்  பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய்அகண்டமாக்குவிசாலப் பார்வையால்  விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என்  குழந்தை மனம்

பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக்கொண்டு கவியரங்கங்களில் பங்குகொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள்தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள்  இருக்கும்வகுப்புகளைசெயல்முறை பட்டறைகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான  காதல் கடிதம் எழுதுவதற்காகத் தியாகம் செய்திருக்கிறேன்பின்னாளில் இலக்கியத்தைத் தேர்வு செய்ததுகவிதையைத் தீவிரமாகப் பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டதுஎன்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்மபருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க  முடியும்.

கி.முகி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன்அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டுஎன் அப்பா தமிழ்ப்பேராசிரியர்இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும்நிழல்களும்கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும்ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா  மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள்சினிமாக் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரச்சொல்லுவார் அப்பாதிக்கித் திணறி அகராதியைக் கிழித்து தோராயமாக செய்து தருவேன்வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள்  மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போதுமற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களைதான் நான் திரையரங்குகளில்அதுவும் அவரோடுதான் போய் பார்க்க முடியும்வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.

கல்லூரிக் காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும்தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத்  தள்ளியது எனலாம்பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும்சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்லநானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபுத்துவ  அமைப்பாக சினிமா துறை எனக்கு தெரிந்ததும்எனக்கான தனியான சினிமா பயணத்தைத்  தொடங்கினேன்.

எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?

லீனா மணிமேகலைஎம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறதுஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லைஏன் ஒரு சாரார் மட்டும் சமமாக நடத்தப்படுவதில்லைஏன் ஒடுக்கப்படுகிறார்கள்இந்த ஏற்றத்தாழ்வின் திட்டங்களை யார் தீட்டுகிறார்கள்என்ற கேள்விதான் நம் எல்லோருடைய சிந்தனைக்கும் வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்பெரிய  தத்துவங்கள்,கருத்தியல்கள்வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால்தானே  இருக்கின்றன.

இலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறீர்கள்?

லீனா மணிமேகலைகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும்பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும்  படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக்  கொண்டிருக்கமாட்டேன்பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால்பெண் என்பவளுக்கு  இருப்பு மட்டுமல்லநினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும்வெள்ளிவீதியாரையும்காரைக்கால் அம்மையையும்ஆண்டாளையும்முத்துப்பழநியையும்இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துகொண்டிருக்க மாட்டேன்என்  முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும்என் முன்னோடியாகப் பெரியாரை தெரிவு  செய்திருக்கிறேன்.

இடதுசாரி குடும்ப பின்னணி என்பதால் கார்க்கியின் தாய் நாவல்தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதிபுரட்சியில் இளைஞர்கள்ஜமீலாமுதல் ஆசிரியன்செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும்தாமரையும்பாரதிபாரதிதாசன்பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்திவைகல்கியும்சாண்டில்யனும்பாலகுமாரனும்,  ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவைசுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும்,அம்பையும்தான் என் ஆதர்ச எழுத்தாளுமகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின்ம பருவம்அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம்.  சிறுகதையில் மாண்டோ பெரியவனாகடவுள் பெரியவனா என வியந்ததுண்டுகு.அழகிரிசாமிகி.ராஜநாராயணன்புதுமைப்பித்தன்ஜி.நாகராஜன்அசோகமித்திரன்லா..ரா,வண்ணநிலவன்வண்ணதாசன்ஆதவன்சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில்தான்தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம்  என் நூலகராகவும் உதவி செய்தார்.

கவிதையில் பிரமிள்கலாப்ரியாஆத்மநாம்சி. மணிநகுலன்பிரம்மராஜனின் மொழி பெயர்ப்புகள்சுகுமாரன்மனுஷ்யபுத்திரன்யவனிகா ஸ்ரீராம்ஹெச்.ஜிரசூல்ரிஷிசுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.

ஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும்யோ.கர்ணனும்கவிதையில் சேரன்கருணாகரன் .ஐச.ஜெயபாலன்சிவரமணியும்கட்டுரைகளில் .முத்துலிங்கமும் மொழியியலில் நுஃமானும் எனக்கு நெருக்கமானவர்கள்.

ஆங்கிலம் வழி தாஸ்தாவெஸ்கிடாட்ஸ்டாய்பாமுக்மார்குவெஸ்கமலா தாஸ்மஹாஸ்வேதாதேவிஅருந்ததி ராய்அமிதவ் கோஷ்ருஷ்டிகிரண் தேசாய்காலத் ஹுஸைனிசில்வியா பிளாத்செக்ஸ்டன்சிக்சூஉல்ஃப்கேதெ ஆக்கர்அக்மதோவாகொலண்டாய்ட்ரின் மின்ஹா,காஃப்காஜெர்மைன் க்ரீர்ஜூன் ஜோர்டன்மாயா ஏஞ்சலோஅனாய்ஸ் நின்அலைஸ் முன்ரோ,அலைஸ் வாக்கர்நபகோவ்பாமுக்,முராகாமிஅமெரிக்க பீட்ஸ் தலைமுறை எழுத்தாளர்கள்  ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.

சம காலத்தில்நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன்பாலை நிலவன்கண்டராதித்தன்செல்மா ப்ரியதர்ஷன்இசைஇளங்கோ கிருஷ்ணன்தூரன் குணாசபரிவெயில்,நரன்,  சிறுகதை எழுத்தாளர்கள் அசதாஅழகிய பெரியவன்ஆதவன் தீட்சண்யாபாலா, நாவலாசிரியர்கள் பாமாஜோ.டி.குரூஸ்ஜாகிர் ராஜா.

திறனாய்வில் பிரம்மராஜனும்எஸ்.சண்முகமும்சி.மோகனும் நான் கவனமாக வாசிப்பவர்கள்.மார்க்ஸின் கட்டுரைகள் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக்கொண்டேயிருக்கும் உந்துசக்திசாஹிப் கிரான் சுயத்தை இழந்து  அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.

இப்படி எல்லோரும்எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும்  முன்மாதிரிகள் தாம்.

இயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த மாதிரியான  செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?

லீனா மணிமேகலைஇலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும்பயணமும்கலைகோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும்திரைப்பட விழாக்களுக்கு செல்வதும்அரசியல் கட்டுரைகளை தமிழிலும்ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில்தான் எழுதுவதும்திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன்மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும்அவர்களோடு தணிக்கைக்கெதிரானகருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவைபெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன்தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்குகல்லூரிகளுக்குபள்ளிகளுக்குத் தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும்சாதிபெண்ணியம்– கலாசார அரசியல்சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

என் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும்  மக்களை சந்தித்து உரையாடியதுவிவாதித்ததுஅவர்களின் கவலைகளைநம்பிக்கைகளைஅனுபவங்களைகோபங்களைஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டதும் நான் கற்ற சிறந்த கல்விபள்ளிபொறியியல் கல்லூரி படிப்பைவிட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்படங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியேதான் பெற முடிந்ததுகருத்தியல் ரீதியாகவும்மார்க்சியம்தலித்தியம்பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதைவிட மக்களின் அன்றாடப் போராட்டங்களின்வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிறஅனுபவம்.

இது  தவிர்த்து என் நேரத்தை பெரிதும் நிரப்புவது இசைதான்இசை என்னை சதா குணப்படுத்தும் மாய சக்திஇளையராஜாரஹ்மான் என்று வெகுஜன தமிழிசையில் தொடங்கிஹிந்துஸ்தானிசூஃபிஜாஸ்ப்ளூஸ்வெஸ்டர்ன் கிளாசிக்கல்பாப்ராப்ஹிப்ஹாப் என்று என் பயண வாழ்வு  இசையின் ரசிக வெளியை விரிவுபடுத்தியிருக்கிறது

உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள்அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?

லீனா மணிமேகலைஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாச்சாரப் பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும் (Thomson MediaFoundation), திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே(Tampere) பல்கலைகழகத்திலும்புதுதில்லி இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பு  மேற்பார்வையில் பங்கேற்று ‘கனெக்டிங் லைன்ஸ்‘(Connecting Lines) என்ற மாணவர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி  மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றதுஅந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில்தான் லண்டனில்ஃபிரான்ஸில்ஜெர்மனியில்சுவிஸ்ஸில்  ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன்ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தனஅவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோதுஅமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும்விவாதங்களையும்சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள்சங்கரபாண்டிவிஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும்பல்வேறு பல்கலைக்கழக இந்திய அமெரிக்க நண்பர்களையும்,செயல்பாட்டாளர்களையும்ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.

சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள் மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும்சந்திப்புகளும் நடந்தனஅந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன்சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்ததுமலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது.மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத்தமிழ்ச் சங்கத்திலும், சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.

அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம்மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும்பொருட்களைத் திருடு கொடுத்ததும்வேளைக்கு ஒரு பிரட்டும்கால் கோழியும்அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும்லத்தீன் அமெரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப்போட்ட பயணமதுசேவெசின் 11 மணி நேர  உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ்கூட தெரியாமல்புல் தரையில் அமர்ந்து கேட்டது  பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறதுஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும்ஆவணப்படங்களை திரையிட்டதும்பார்த்ததும்இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின்போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும்இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய  மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான  சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.

தேவதைகள் ஆவணப்பட முயற்சியில்சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனராக என்னை நிலைநிறுத்தியதுபெர்லின் திரைப்பட விழாகென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழாமுனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டதுமும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியதுரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றதுஇன்னும் பெல்போர்ன்பெல்கிரேட்சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.

சார்லஸ் வாலஸ் ஸ்காலர்ஷிப்பில் லண்டன் பல்கலைகழகத்தில் மானுடவியல்சமூகவியல் சினிமா குறித்த ஆறு மாத ஆராய்ச்சி படிப்பு என்னை பரீசிலித்து கொள்ளவும்படைப்புலக சுற்றளவை விரித்துக்கொள்ளவும்கலைகாட்சி – தொழில்நுட்பம் வராலாற்றை பரிச்சயம் செய்துக்கொள்ளவும் உதவியது.

காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோதுதான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்ததுஃபிரான்ஸிலும்இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும்லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால்உரையாடலால்புரிதலால் நிரப்பிசேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.

அகில உலகளவில்  நடக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் பங்கேற்றதால்தொடர்பயணியானேன்செங்கடல் திரைப்படத்திற்கான விநியோகத்தை Crowd Funding – நேரடி பார்வையாளர்கள் பங்கேற்பு திட்டத்தின் மூலம் ஐரோப்பா – அமெரிக்கா கண்டங்களில் ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேலான திரையிடல்களை ஒழுங்கு செய்யமுடிந்ததுஉரையாடல் வெளியை மொழி கடந்துபிராந்திய தேச கலாசார  எல்லைகள் கடந்துகலை மிக வீர்யமாக முன் நகர்த்தும் என்ற நம்பிக்கையை என் திரைபயணங்கள் உறுதி செய்த வண்ணம் இருக்கின்றன

உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?

லீனா மணிமேகலைஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத  நம்பிக்கைஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும்இடையீட்டைக் கோர முடியும்ஒரு துண்டு வீடியோமக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்மாத்தம்மாபறைபலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையேஅரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில் இப்படங்கள் வெற்றி பெற்றன.

ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளைத் தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லைஎனக்கு தொழில்நுட்பம் கைவருகிறதுமக்கள் பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும்சரிபடமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன்ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத்தான் என்னை வரித்துக்கொண்டேன். கிராமங்கள் தோறும் தெருமுனைகளில்பள்ளிக்கூடங்களில்கல்யாண மகால்களில்தேரடியில்நூலகங்களில்பஞ்சாயத்து அலுவலகங்களில்மாட்டுக் கொட்டில்களில்கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன்நிழல் திரைப்பட இயக்கம்அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம்இடதுசாரிகளின் இளைஞர்பெண்கள்பண்பாட்டு இயக்கங்கள்மகளிர் சுய உதவிக் குழுக்கள்என்.ஜி.ஓக்கள்பல்கலைகழகங்கள் என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றதுஒவ்வொரு திரையாக்கமும்ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.

என் படங்கள் சில கேள்விகளைஎளிய நம்பிக்கைகளைசுய விமர்சனங்களைஇடையீடுகளைஉறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்.

பெரியாரியம் பற்றி பேசினீர்கள்திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?

லீனா மணிமேகலைதிருமணம்குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம்பட்ச  நிலைக்குத் தள்ளுபவைதான்இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விடவறுமையால் இறக்கும் மக்களைவிடகுடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

உலகமயமாக்கல்தாராளமயமாக்கல்தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள்வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான் எஞ்சியுள்ளதுகுடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப்படவில்லையென்றால்பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்வதையும்மனப்பிறழ்வடைவதையும்வெளியேறுவதையும் தடுக்க முடியாதுகுடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல்துப்பரவுகுழந்தை வளர்ப்புவீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும்குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!

மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில்தான் நடந்துக் கொண்டிருக்கிறதுகேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம்பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.

ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோதுதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லைஎன் குடும்ப வரலாற்றிலேயேமுதன்   முதலாக சாதிமத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான்ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்துஇன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன்வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம்நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம்என் அன்புக்குரியவர்களைக் கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும்வேறு வழி தெரியவில்லைசொந்த சாதியில் சீர் செனத்திநில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல்பெண்ணின் சுயதேர்வுஆண்-பெண் வேலை பகிர்வுவரதட்சணை ஒழிப்புபெண்ணுக்குச் சொத்துரிமைசாதி மறுப்பு திருமணங்கள்காதல் வாழ்வில் சேர்ந்திருப்பதுகுடும்பமின்மையைத்தேர்வு செய்வதுமண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.

வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமானதுஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக்கொள்வதுவாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாகஒழுங்கு மீறலாகநடத்தை கெட்ட தனமாகத்தான் பார்க்கிறதுஎப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!

தங்கள் இதழியல் அனுபவம் குறித்துக் கூறுங்கள்?

லீனா மணிமேகலை பள்ளிக்கூட காலங்களில் பூந்தளிர் சிறுவர் குழு அமைத்து தினமணி சிறுவர் பகுதியில் எங்கள் குழு நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்து தொடர்ந்து  எழுதியதில் தொடங்கியது என் இதழியல் ஆர்வம்என்னுடைய 13 வயதில்ஓவியப் போட்டியில் வென்று சோவியத் யோனியனுக்கு ஒரு மாதம் பயணம் செய்தேன்சரவ்தேச ஆர்தெக் குழந்தைகள் முகாமில் பங்கெடுத்த அனுபவத்தை ஏழு வாரம் ஜனசக்தியில் தொடராக எழுதினேன்பொறியியல் கல்லூரி காலங்களில் சிறகுகள் என்ற கையெழுத்துப்பிரதி எடிட் செய்தேன். அந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அறிமுகம் செய்த மாணவர் எடிட்டர் திட்டத்தில் பங்கு பெற்றதில்சிறகுகளில் எழுதியிருந்த சிவகாசி குழந்தை தொழிலாளர்கள்  பற்றிய கட்டுரை விகடனில் வெளியானதுஅப்போது நான் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்துஎன் தாத்தா (.வெங்கடசாமிபொறியியல் படிப்பை விட்டுவிட்டு நான் ஏன் ஜர்னலிசம் படிக்க கூடாது என்று கேட்டார்என் அப்பா(இராஇரகுபதிகட்டோடு மறுத்துவிட்டார்.  விகடன் தந்த உற்சாகத்தில்தினமணிக்கு கூட நடுப்பக்க கட்டுரை எழுதினேன்தாத்தா அதை ஃபிரேம் செய்து வைத்திருந்தார்அதில் அவருக்கு ஒரே பெருமை.

திருமணத்திற்குப் பிறகுதிரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் திரை‘ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்தோம்.  ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம்  சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம்ஒரு இலக்கிய வாசகியாகலும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.

உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றனபிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்களாஅவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன?

லீனா மணிமேகலைகவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட  இடங்களில் வாகாகச் சென்று அமர்வதில்லைஒழுங்கு குலைந்த அடுக்குகளில்தான்  இடம்பெறுகிறதுஅவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட  உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றனவெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லைஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில்தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.

ஆமாம்நான் பிரக்ஞையோடுதான் வார்த்தைகள்அடுக்குகள்வடிவங்கள் வழியாகக் கவிதைகளைத் தயாரிக்கிறேன்அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின் (Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.

எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள்இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?

லீனா மணிமேகலைஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட  கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்அவ்வகையில்  உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக்  கருதுகிறேன்கடவுள் உட்பட.

இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.

வாசகர் படைப்பாளியாகக் கோரவில்லைஅவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார்அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறதுவாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில்மூலப்பிரதி என்பது எப்படி  எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவழிமொழிவதாக இருக்கிறதோவாசக மறுபடைப்பு பிரதி  எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்அந்தப் பாதையில் எனக்கென்ற உலகைப் புதியதாகக் கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களைப்  பொருட்படுத்தியும்கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.

உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள்உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?

லீனா மணிமேகலைஇல்லை.நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும்,நொய்மையையும் காட்டினஅது குறித்து எனக்கு வருத்தம்தான்சமூகம் என்பது ஒரு புனைவுஅதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள்பெண் தன் உடலைஉலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித  பதற்றம் ஏற்படுகிறதுஇங்கே மத அடிப்படைவாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத்தான்  மார்க்சியவாதிகளும் வைக்கிறார்கள்எல்லா இசவாதிகளும் வைக்கிறார்கள்பெரும்பாலும்  பொறுக்கிகளின்  கூடாரமாக இயங்கும் தமிழ் இணையம் அதற்கொரு சாட்சி.  

 பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாகச் சமூகத்தின்  கையிருப்பில் இருக்கின்றனஆனால் பொதுவாக அத்தகைய ‘சமூக‘ ஆரோக்கியம் குறித்து நான் கவலைப்படுவதில்லை

தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும்அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தை கண்டும்சராசரியாக மூன்று மீனவக்  குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும்செங்கடலை எழுதத்  துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின்  துயரத்தை நெருக்கமாக உணரும்போதுஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?

லீனா மணிமேகலையுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சினைதேசியத்திற்கு  எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினைஇடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள்  பலியாவார்கள்வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி  எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாகக்  கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில்  சிறிமாவோ –லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக்கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக்கொடுத்ததும் இனப்போருக்கு முன்தானே நிகழ்ந்தது.

இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும்பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று  வாழாதஅல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்ததுஜே.வி.பிமுன்னெடுத்த எழுச்சியின்போது பெரும்பான்மை இனமான சிங்களர்களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றதுபிறகு  இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய  இனத்தை ஒழித்தது.

சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த  வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்ஒரு வேளை  மீனவர்கள் வரி கட்டுபவர்களாகஅந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால்அரசாங்கங்கள் பதில் சொல்லும்ஆனால்எல்லை தாண்டும் “சர்வதேச குற்றவாளிகளை ” காப்பாற்றுமா என்றால் செய்யாதுபாரம்பரியமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக்கொள்ளும்ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும்.ஆகவே மீனவர் பிரச்சினையை  மனிதாபிமான பிரச்சினையாகப் பார்க்க முடியாதுஅது அரசியல் பிரச்சினை.

ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாதுஅதன் வெளிப்படையான முரண்பாடுதான் யுத்தம்மக்களை சதா சாமானியர்களாக்கி அச்சுறுத்துவதுதான் யுத்தத்தின் வெற்றிஅதற்காகத்தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத்  தளவாடங்களில் இரவு பகலாகக் கருவிகளை உற்பத்தி செய்கின்றன.

இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்.

தனுஷ்கோடிராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின் (செங்கடல்மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்ததுசினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லுங்கள்.

லீனா மணிமேகலைஎப்படிக் கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாகநாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம்என்ற சாடிசத்தோடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாகபூணூல் போட்ட அய்யர் சாமிகள் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் வங்காள வரிகுடாவும் – இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதத் தலமாக தனுஷ்கோடி இதுவரை  அறியப்பட்டிருக்கிறதுஎனக்கு அது ஒரு பராரி நிலம்நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடுஉயிர் வாழ்தலை  மட்டுமே செய்துகொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு  இனம் கண்டதுகுறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை  நீட்டித்துக்கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டதுஅதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியதுஅரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான  பிரக்ஞை இல்லைஅந்தச் சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை  என்பது எனக்கு தெரியும்ஆனால் பொது நீதிக்கும்தன்னிலைக்குமிடையே அவர்கள் படும்  போராட்டத்தை மிக நேர்மையாகஉண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம்  எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்ததுஅதை எந்தப் பழுதுமில்லாமல்  செய்திருக்கிறேன்.

ராணுவம்காவல் துறைசுங்க வரித்துறைஉளவுத்துறை என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றதுஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப  வேண்டியிருந்ததுஅவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின்  தோல்வியாக இருக்கிறது.என்று நினைக்கிறேன்படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை  மீறி கூட மீனவர்கள் வாழத்தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.ஆனால்இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன்  என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.

தங்களின் முந்தைய படைப்புகளின் (குறும்படங்கள்ஆவணப்படங்கள்மீது உங்களுக்கு  அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள்உங்களுடைய  முந்தைய குறும்படங்கள்ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை  செய்கிறீர்கள்?

லீனா மணிமேகலைஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு  வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.

யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?”

செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன்நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.

வெள்ளை வேன் கதைகள்  என்ற ஆவணப்படம் உருவான விதம் குறித்து கூறுங்கள்?

லீனா மணிமேகலைநான் இலங்கைக்கு யாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்காக சென்றபோதுபடம் எடுக்கும் எந்த தயாரிப்புகளுமற்றுதான் சென்றேன்ராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்க மக்களின் ஒவ்வொரு அசைவையும்கண்காணிக்கும் உளவுத்துறையால் நிறைந்த பகுதிசி..டி என்ற வார்த்தை இரண்டு பேர் சந்தித்துப் பேசினாலே சில தடவைகளாவது உச்சரிக்கப்பட்டு விடும்என் பாஸ்போர்ட் விபரங்கள் ஒரு பத்து தடவையாவது வெவ்வேறு செக் போஸ்டில் பதியப்பட்டிருந்தன . இதில் படமெடுப்பதை பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது

ஜூலையில் மன்னாரில் இருந்தபோதுநவிப்பிள்ளை ஆகஸ்ட் மாதம் வருவதை முன்னிட்டு  காணாமல் போன உறவுகளைபோராட்டத்திற்காக இணைத்துக்கொண்டிருந்த இயக்கத்தோடு நட்பு கிடைத்ததுமன்னாரில் இருந்து முல்லைத் தீவு வரை மறுபடியும் இரகசியமான ஒரு நீண்ட  பயணம்கிட்டத்தட்ட 25 கிராமங்களில்,500குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆன்ம பயணம் தான் இந்தப் படத்திற்கு உரம்.தன்னார்வளராக ஒளிப்பதிவு பணியை செய்ததோட,சிங்கள மனித உரிமை ஆர்வளர்களும் எங்களுடன் பயணித்ததால்மொழிபெயர்ப்பாளராகவும்  பணியாற்றினேன்என்னையும்என் ஒளிப்பதிவாளர் அரவிந்தையும் பாதுகாத்துஉணவளித்துஇடமளித்து தங்கள் குடும்பம் போல பார்த்துக்கொண்ட நண்பர்கள் தொடர்ந்து களத்தில் வேலைசெய்துகொண்டிருப்பதால்அவர்களின்பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத   துரதிருஷ்டசாலியாக நிற்கிறேன்

வெள்ளை வேன் கதைகள் என்று சுயாதீனமாக படம் எடுக்க வேண்டும் என்ற பொறி  இரணபாலையில் ஜெயா அக்காவை சந்தித்தபோது தான் தட்டியதுஇரணபாலை போரால்  கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிஷெல் விழாத இடம் இல்லாததால்பொத்தல் நிலமாக  காட்சியளித்த அந்த ஊரில் கூடுதலாக சில நாட்கள் தங்கி ஜெயா அக்காவின் கதையை  ஆவணப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன்காணாமல் போன குடும்பங்களின் நம்பிக்கையும்பேரினவாத அரசாங்கத்தை விடாமல் சவால் விட்டுக்கொண்டிருக்கும் அஞ்சாநெஞ்சமும்   என்னையும் தொற்றிக்கொண்டதுஇரண்டாவது நாளே ராணுவத்தால் பிடிக்கப்பட்டோம்குண்டடிகளால் துளைக்கப்பட்ட ஒரு ஐஸ் க்ரீம் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த  சிறுவர்களை ஒரு புதரில் மறைந்து படமெடுத்துக்கொண்டிருந்த எங்களை வசமாகப் பிடித்துக்கொண்டார்கள்மூன்று மணி நேரம் யார் யாரோ வந்தார்கள் விசாரித்தார்கள்உடனடியாக  இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று மட்டும் இறுதியாக உத்தரவு வந்ததுஅடுத்த  அரை மணி நேரத்தில் கொழும்பு பஸ்ஸில் ஏறிஇந்தியா வந்து  சேர்ந்தோம்

 எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை நண்பர்கள் எல்லோரும் மிகப்  பதற்றமாகி  விட்டார்கள்இந்தியா வந்தும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லைநானும் அரவிந்தும் ஒரு  வாரம் குமைந்து தீர்த்தோம்மறுபடியும் விசா அப்ளை செய்து பார்த்தோம்கிடைத்ததுநவிப்பிள்ளை வருவதையொட்டி மீடியா நடமாட்டமும் சற்று நெகிழ்ச்சியும் இருந்த காலகட்டம்யாழ்ப்பாணம்கொழும்பு நகரங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்ககாணாமல் போனவர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை ஆவணப்படுத்தினோம்புத்தளம்மன்னார்கிளிநொச்சிஹோமாகாமாநீர்கொழுப்புதிரிகோணமலை என்று பூகோள ரீதியாகவும் இன ரீதியாகவும்  பிரித்தாளப் படுகின்ற மக்களின் வாழ்க்கையை கேமிரா கொண்டு இணைக்க முயற்சி செய்தோம்காணாமல் போன குடும்பங்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு தீராத தலைவலியை  கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்சர்வதேச அரங்கில் மிக மோசமான அழுத்தத்தை ராஜபக்சே அரசாங்கம் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் சந்தித்து வருகிறதுவெள்ளை வேன்  கதைகள் காணாமல் போன உறவுகளின்  விஷுவல் ஆயுதம்.

குறைந்த வசதிஇராணுவ மிரட்டல் இவற்றுக்கு மத்தியில் உங்களால் எப்படி சவால் மிகுந்த  கருத்தை முன்வைக்கும் ஓர்  ஆவணப்படத்தை எடுக்க சாத்தியமானதுஉங்கள் அனுபவதைக்  கூறுங்கள்?

லீனா மணிமேகலைபாதுகாப்பு காரணமாக நாங்கள் லாட்ஜில் எல்லாம் தங்க முடியவில்லைசில நாட்கள் ராணுவத் தடுப்புகளை வீடியோ எடுப்பதற்காக டாக்சி எடுத்தோமே தவிரபெரும்பாலும் டவுன் பஸ்ஸில் தான் பயணம் செய்தோம்டேப்புகளைப் பறிமுதல் செய்தல்பல  மணி நேரம் விசாரித்தல்படம் எடுக்க விடாமல் தடுத்தல் எல்லாமும்தான் நடந்ததுஎப்படியெல்லாம் சமாளித்தோம் என்ற தந்திரங்களை எல்லாம் எழுதினால்நாங்கள் எப்படி  மறுபடியும் படமெடுப்பதுஆட்களையே  இராணுவம் ஸ்கேன் பண்ணும்போது கேமிராவை   அனுமதிக்குமா என்னஎப்படியெல்லாம் அதிகாரத்தை ஏமாற்றலாம் என்பதை படத்தைப்  பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்இன்று நேற்றல்ல வரலாறு முழுக்க அரசாங்கங்களின்  கண்ணில் விரல் விட்டே ஆட்டியிருக்கிறார்கள்  கலைஞர்கள்.

வெள்ளை வேன் கதைகள் படத்தின் தற்போதைய பிரதிஸ்வீடிஷ் திரைப்படப் பள்ளியின்  உதவியோடு ஈழத் தமிழ் போராட்டத்தின் முழு போராட்ட வரலாற்றுப் படமாக  உருவெடுக்கவிருக்கின்றதுஅதனால் திரையிடல் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டு பிரதி  மறுஉருவாக்கப்  பணிகள்  நடந்துகொண்டிருக்கின்றன

அடுத்தடுத்த படைப்புகள் குறித்த திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா?

லீனா மணிமேகலை:Rape Nation என்ற பெண்களுக்கான எதிராக நடக்கும் பாலியல் கொடும்போரைக் குறித்த முழுநீள ஆவணப்படத்தின் படப்படிப்பில் தற்போது ஈடுபட்டிருக்கின்றேன்சட்டிஸ்கர்மணிப்பூர்  படப்படிப்பு முடிந்திருக்கும் நிலையில்காஷ்மீர்டில்லிமும்பைகுஜராத்ஹைத்ராபாத்கயர்லாஞ்சி பகுதிகளில் இந்த ஆண்டு முடியும் வரை படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. அடுத்த வருட ஏப்ரலில் முடிவடையும் என நம்புகிறேன்

அது தவிரமலையாளக் கவிஞர் கமலா தாஸ் வாழ்வையும் பிரதிகளையும் மூலமாக வைத்து தயாரிக்கப்படவிருக்கும் மலையாள/ஆங்கில திரைப்படத்தின் எழுத்து வேலைகளை முடித்து தந்திருக்கிறேன்நடிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

தமிழிலும் அடுத்த படத்திற்கு தயாரிப்பு பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றனஅது ஒரு அழகான பீரியட் படம். 2015 இறுதிக்குள் அதை வெளியிடும் வாய்ப்புகள் இருக்கின்றது.

நேர்காணல் : ம. நவீன், கே. பாலமுருகன்