
கமலா தாஸ் வாழ்க்கை திரைப்படமாகிறது – ஜன்னல் நேர்காணல்
பிரபல மலையாளக்கவிஞர் கமலா தாஸின் கதையை,படமாக எடுக்கும் எண்
கமலா தாஸ் என்னை மிகவும் பாதித்த கவிஞர். என் ஆதர்சம். அவருடைய Summer in Calcutta என் கைப்பையில் எப்போதும் வைத்திருப்பேன். “என் கதை” என்ற அவரது சுயசரிதை நூல் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை. எழுபதுகளில் அவர் எழுத துணிந்த விசயங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பெண்கள் கூட எழுத தயங்குபவை. அவரைப்போல துணிச்சலாக தன் ஆன்மாவை எழுத்தில் பதித்த எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கனடிய எழுத்தாளர் “மெரிலி வீஸ்பர்க்” கமலா தாஸின் இறுதி நாட்களில் அவரோடு இருந்து எழுதிய “Love Queen of Malabar” என்ற புத்தகம் படித்தபோது அவருடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம் என்று பொறி தட்டியது. முரண்பாடுகளின் குவியலாய், ஒரு கவி மனதின் அத்தனை அலைக்கழிப்புகளும் கூடியதாய் அவருடைய வாழ்வு, அன்புக்கு ஏங்கி தவிக்கும் அவரின் ஆன்மா என கமலா தாஸ் அழியாத சித்திரமாக பதியப்பட வேண்டியவர். என் படம் அதை நிறைவேற்றும்.
ஏன் கமலா தாஸ் பற்றிய கதை இப்
கமலா தாஸின் தேவை எக்காலத்துக்கும் இருந்துக்கொண்டே தான் இருக்கும் என்பது என் கணிப்பு. வாழ நினைக்கும் வாழ்வு ஒன்றாகவும், சமூகம் நிர்ப்பந்திக்கும் வாழ்வு ஒன்றாகவும் இருக்க சற்று சுதந்திரமாக மூச்சுவிடுவதற்காக எழுத்தை நாடும் ஒவ்வொரு பெண்ணிலும் கமலா தாஸ் ஆழமான ரேகைளாக பதிந்திருக்கிறார். அப்படி அவர் என்னுள் பதிந்திருக்கும் ரேகைகளில் ஒளியையும் ஒலியையும் பாய்ச்சிப் பார்க்க போகிறேன்.
கமலா தாஸை பலரும் விமர்சிக்க,
ஒரு ஆண் தன் உறவுகளைக் குறித்து எழுதும்போது அந்தப் பிரதி பொதுப்பிரதியாக பார்க்கப்படுகிறது. அதுவே ஒரு பெண் எழுதும்போது அவரின் தனிப்பிரதியாக பார்க்கப்படுகிறது. பெண் எழுத்தின் மீதான சாவித்துளை பார்வைகளும், ஒழுக்கம் குறித்தான தீர்ப்புகளும் சதா அவரை சர்ச்சைக் குள்ளாக்கின. அவரை பல பெயர்களிட்டு அழைத்தன. சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளுக்கும் போலித்தனங்களுக்கும் அவரின் எழுத்து அச்சுறுத்தலாக இருந்தது. அதனாலேயே சமூகம் அவரைப் பல வகையில் தண்டித்தது. அவருடைய வாழ்வும் எழுத்தும் அதற்கு அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அவரைப் பிரதிபலித்தது என்பதை விட அவர் வாழ்ந்த சமூகத்தையும் காலத்தையும் தான் மிகத் துல்லியமாக பிரதிபலித்தது என்பேன்
தமிழில் கமலா தாஸ் பெரிய அளவி
ஜெயமோகனிடம் இதைக்குறித்து நேரிடையாகவே விவாதித்திருக்கறேன். அவர் பெண் எழுத்தை, எழுத்தாளர்களை மஞ்சக்காமாலை கண்களுடன் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கமலா தாஸைப் பற்றி சக்கரியா எழுதியிருப்பதைப் படியுங்கள். என்.எஸ். மாதவன் எழுதியிருப்பதைப் படியுங்கள். ஜெயமோகன் எழுதும் தீர்ப்புகளை விட அவர் எழுதும் புனைவுகளைப் பொருட்படுத்த விரும்புகிறேன்.
தமிழில் என்ன மாதிரியான தாக்
நான் தமிழ் மார்க்கெட்டுக்காகவோ, மலையாள மார்க்கெட்டுக்காகவோ படங்கள் செய்வதில்லை. நான் இதுவரை செய்துவரும் இன்டபென்டண்ட் சினிமா மொழியில் தான் கமலாதாஸ் செதுக்கப்படுவார்.
கமலா தாஸ் படம் தேவையில்லாத ம
சினிமா கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்த சினிமாவாலும் மதக்கலவரங்கள் ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.
படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த வித்யாபாலன் மற்றும் மஞ்
தன் திறமை மேல் நம்பிக்கையுள்ள கலைஞர்கள், அரசியல் சில்லுண்டிகள் – தங்களை, தங்கள் முடிவுகளை தீர்மானிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
பிரபலங்கள் யாரும் கமலாதாஸ்
கமலாதாஸாக நான் நடிப்பதாக இருக்கும் ஏற்பாட்டில் மாற்றம் இல்லை. “என் கதை” எழுதும் போது முப்பதுகளில் இருந்த கமலா தாஸின் பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கிறேன். சிறுமி கமலாதாஸ் மற்றும் பதின்பருவ கமலா தாஸ் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடந்துக்கொண்டிருக்கிறது.
மலையாள இயக்குனர் கமல் பார்
கமல் அப்படி சொல்லித்தான் என் முயற்சிகளை மூன்று வருடங்களாக நிறுத்திவைத்திருந்தார். கமர்சியல் இயக்குநர்களிடம் நேர்மையை எதிர்பார்த்தது என் முட்டாள்தனம் தான். வியாபார நிர்ப்பந்தங்களுக்கு முன் கவிஞரின் ஆன்மா எப்போதும் செல்லாக்காசு தான்.
கமல் போன்ற பெரிய கமர்சியல்
கமலா தாஸை சந்தைக்கு ஏற்றவாறு பினாயில் போட்டுக் கழுவிக் கொடுப்பாராயிருக்கும். அது அவர் பாடு.
கமர்சியல் படமாக எடுக்கத் தி
என்ன மாதிரியான கேள்வி இது? எனக்குத் தெரிந்த சினிமாவாக எடுப்பேன்.
படம் தொடர்பான அடுத்த கட்ட
ஸ்கிரிப்டை இன்னும் ஆழமாக உழுதுக் கொண்டிருக்கிறேன். அதற்குப்பின் Indo Canadian Co-Production – ஆக படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும். கேரளா, மும்பை, கொல்கத்தா, பூனா மற்றும் கனடாவில் படப்பிடிப்பு நடைபெறும். 2018 -ல் படம் களம் காணும்.
20/04/2017