“என்போன்ற பெண்ணை ஆணாதிக்க – சாதிய தமிழ்ச் சமூகம் கொஞ்சிக் குலாவவா செய்யும்?” – லீனா மணிமேகலை பேட்டி
எந்த அரசியல் பின்புலமும் செல்வாக்கும் இல்லாத எளிய பின்னணியிலிருந்து வந்த என் கலை வெளிப்பாட்டுச் சுதந்தரத்தையும் வழிபாட்டுணர்வு சுதந்திரத்தையும் இந்திய அரசியலமைப்பு காப்பாற்றியுள்ளது.
அதனால், இந்த இடைக்காலத் தடையை இந்துத்துவ பாசிச ஆட்சியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் விடுத்திருக்கும் எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். ‘காளி’ என்ற ஆதிப்பெண் வடிவம் எல்லோருக்குமானது. இந்துத்துவவாதிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்ற செய்தியையும்தான், இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – உறுதியுடனும் உற்சாகத்துடனும் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.

லீனா மணிமேகலை
‘காளி’ ஆவணப்பட போஸ்டர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து லீனா மணிமேகலையை கைதுசெய்ய இடைக்கால தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தற்போது, கனடாவில் கலை சார்ந்த படிப்பை படித்துக்கொண்டிருந்தாலும் தன்மீதான வழக்குகளை எதிர்கொள்வதோடு, தனது ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கிய ‘எட்டாம் கன்னிமார் திரட்டு’ நூலையும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு கொண்டுவந்திருக்கிறார் லீனா மணிமேகலை. பல்வேறு கேள்விகளுடன் அவரை தொடர்புகொண்டு பேசினோம்,
“உங்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்திருக்கிறது. ஒருவேளை, மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் சிறை என்று உத்தரவிட்டால் என்ன முடிவு எடுப்பீர்கள்?”
“தமிழ்நாட்டில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள்?”

“காளி ஆவணப்படம் எதைப் பற்றியது?”
“ஜூன் 26-ஆம் தேதி குயர் சமூகத்தினருக்கான சர்வதேச சுயமரியாதை தினம். அன்று, டொரான்டோவில் நகர் உலா போகும் காளியை பல்வேறு இன-தேசிய-பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் தரிசிக்கும்போது நடக்கும் காட்சிகள்தான் ‘காளி’. அதில், காளியாக வலம் வருவது நான்தான். இந்த பாணி படங்களை நிகழ்த்துக்கலை, ஆவணப்படம் என்று வகைப்படுத்தலாம். Loitering என்று குயர் அரசியல் பதம் ஒன்று உண்டு. ‘What if a goddess decides to loiter?’ என்ற என் கேள்விக்கான பதில்தான் ‘காளி’. இப்படத்திற்காக, பல்வேறு நாடுகளிலுள்ள குயர் தோழமைகளின் அரவணைப்பு எனக்கு கிடைத்திருக்கிறது”.
“குயர் சமூகம் குறித்து சமீபத்தில் வெளியான பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தைப் பார்த்தீர்களா?”

“‘மாடத்தி’, ‘செங்கடல்’ போன்ற உங்களுடைய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் முழுமையாக போய் சேரவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?”
“தமிழ்ச் சமூகம் சுயாதீனத் திரைப்படங்களையோ கலைஞர்களையோ என்றும் மதிப்பதில்லை, பொருட்படுத்துவதுமில்லை. அதனால் இழப்பு எனக்கு மட்டுமில்லை. ஆனால் சினிமா ஒரு பிரபஞ்சக்கலை. நான் என்னை அதன் கண்ணியாகத்தான் கருதுகிறேன்”.
“ஆணாதிக்க, சாதிய பின்புலத்தில் இன்னும் உழன்றுக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், என்னை மாதிரியான சுயமரியாதை மிக்க, தனித்துவமானப் பெண்ணின் இருப்பை கொஞ்சிக் குலாவுமா என்ன? என்னை வீழ்த்த நினைக்கிறது. ‘கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கும்வரை உன்னை யாராலும் அழிக்க முடியாது கண்ணம்மா’ என்று என் அப்பா, காலஞ்சென்ற தமிழ்ப்பேராசிரியர் இரகுபதி சொல்வார். நான் ஒருநாள் கூட, ஒரு மணிநேரம் கூட உழைக்காமல் இருந்ததில்லை. எனக்கு அரணாக இருப்பது, என் வேலை மட்டும் தான்”.
“தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?”

“இலக்கியத்திலிருந்து சினிமா எடுக்கும்போது, பெரும்பாலும் ஆண்கள் எழுதிய படைப்புகளைத்தான் இயக்குனர்கள் சினிமாவாக்குகிறார்கள். பெண்கள் எழுதும் படைப்புகளை திரைப்படங்களாக்குவதில்லையே?”
“அம்பை, தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி, சந்திரா என்று பெண் புனைவாளர்களின் எண்ணிக்கையும் தரமும் குறைந்ததல்ல. ஆனால் தமிழ் சினிமாவின் pro code தேடும் ‘சூப்பர் ஸ்டார்’, ‘சுப்ரீம் ஸ்டார்’ கதைகளை இவர்கள் எழுதுவதில்லையே?”.
உங்கள் ‘மாடத்தி’ மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான ‘புதிரை வண்ணார்கள்’ குறித்து பேசியது பாராட்டுக்குரியது. அதேநேரம், இப்படி திரைப்படங்கள், ஆவணப்படங்கள் எடுப்பவர்கள் சாதி இந்துக்களாக இருந்துகொண்டு சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கும் சாதி இந்துக்களை எதிர்க்காமல், சாதி இந்துக்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளைக் கேள்விகள் கேட்காமல், பட்டியலின பிரிவினருக்குள்ளே சிலர் ஆதிக்கவாதிகளாக இருக்கிறார்கள் என்று காட்டுவதிலேயே ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?

“கனடாவில் படிப்பு எப்படி போய்க்கொண்டிருக்கிறது? இனி கனடாவில்தானா?”